தெலங்கானா அமைச்சராக அசாருதீன் பதவி ஏற்றார்

தெலங்கானா அமைச்சராக அசாருதீன் பதவி ஏற்றார்
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்​கானா மாநில அமைச்​ச​ராக முன்​னாள் இந்​திய கிரிக்​கெட் வீரர் முகமது அசா​ரு​தீன் நேற்று பதவி பிர​மாணம் செய்து கொண்​டார்.

இந்​திய முன்​னாள் கிரிக்​கெட் வீர​ரான முகமது அசா​ரு​தீன் ஹைத​ரா​பாத் ஆளுநர் மாளி​கை​யில் நேற்று காலை அமைச்​ச​ராக பதவி பிர​மாணம் செய்து கொண்​டார்.

அவருக்கு தெலங்​கானா மாநில ஆளுநர் ஜிஷ்னுதேவ் வர்மா பதவி பிர​மாண​மும், ரகசிய காப்பு பிர​மாண​மும் செய்து வைத்​தார். மிக​வும் எளிமை​யான முறை​யில் நடை​பெற்ற இந்த விழா​வில் தெலங்​கானா மாநில முதல்​வர் ரேவந்த் ரெட்டி மற்​றும் அமைச்​சர்​கள் பங்​கேற்​றனர். அதன் பின்​னர் அமைச்​சர் அசாருதீன் செய்​தி​யாளர்​களிடம் அசாருதீன் கூறியதாவது:

அமைச்​சர் பதவி அளித்த தற்காக காங்​கிரஸ் கட்​சி​யின் மேலிடத்​திற்​கும், முதல்​வர் ரேவந்த் ரெட்​டிக்​கும் எனது நன்​றி​யினை தெரி​வித்து கொள்​கிறேன். என் மீது பாஜக, பிஆர்​எஸ் கட்​சிகள் வீண் பழியை சுமத்​துகின்​றன. என் மீது உள்ள எவ்​வழக்​கு​களி​லும் குற்​றம் நிரூபனம் ஆகவில்​லை. இவ்வாறு அசாருதீன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in