நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார்
தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார்
Updated on
1 min read

புதுடெல்லி: நாடு முழு​வதும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணியை மேற்​கொள்வது தொடர்​பாக அனைத்து மாநில தலைமை தேர்​தல் அதி​காரி​களு​டன் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார்.

பிஹாரில் அண்​மை​யில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) மேற்​கொள்​ளப்​பட்​டது. இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்ள தமிழகம், கேரளா, மேற்​கு​ வங்​கம், புதுச்​சேரி, அசாம் ஆகிய மாநிலங்​களில் எஸ்ஐஆர் பணியை மேற்​கொள்ள ஆயத்​தப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

இந்த 5 மாநிலங்​களோடு சேர்த்து நாடு முழு​வதும் எஸ்ஐஆர் பணியை மேற்​கொள்ள முடிவு செய்​யப்​பட்டு உள்​ளது. இந்நிலையில், அனைத்து மாநில தலைமை தேர்​தல் அதி​காரி​களின் 2 நாள் மாநாடு டெல்​லி​யில் நேற்று பிற்​பகல் தொடங்​கியது.

இதில் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார், தேர்​தல் ஆணை​யர்​கள் சுக்​பீர் சிங் சாந்​து, விவேக் ஜோஷி மற்​றும் மூத்த அதி​காரி​கள் பங்​கேற்று உள்​ளனர்.

இதுகுறித்து தேர்​தல் ஆணைய வட்​டாரங்​கள் கூறும்போது, ‘‘நாடு முழு​வதும் எஸ்​ஐஆர் பணியை மேற்​கொள்வது தொடர்​பாக மாநில தலைமை தேர்​தல் அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தப்​படு​கிறது. இதில் எஸ்​ஐஆர் பணியை எப்​போது தொடங்​கு​வது, எவ்​வாறு பணி​களை மேற்​கொள்​வது என்பன குறித்து விவா​திக்​கப்​படுகிறது’’ என தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in