Published : 13 Oct 2025 07:49 AM
Last Updated : 13 Oct 2025 07:49 AM
கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூரில் நேற்று நடைபெற்ற பாஜக விழாவில் சதானந்தன் மாஸ்டர் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி தொண்டர்களிடம் பேசியதாவது:
நான் ஒருபோதும் அமைச்சராக ஆசைப்பட்டதில்லை. அமைச்சரான பிறகு எனது சினிமா வருமானம் கணிசமான அளவில் குறைந்துள்ளது. எனவே நான் நிறைய சம்பாதிக்க வேண்டும். பலருக்கு உதவ வேண்டும். எனவே நான் அமைச்சர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளேன்.
அமைச்சர் பதவியில் இருந்து என்னை நீக்கிய பிறகு சதானந்தன் மாஸ்டரை அமைச்சராக்க வேண்டும் என்று நான் இங்கே மனதாரக் கூறுகிறேன். இது கேரள அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக மாறும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT