Last Updated : 14 Aug, 2018 12:36 PM

 

Published : 14 Aug 2018 12:36 PM
Last Updated : 14 Aug 2018 12:36 PM

காஷ்மீர் எல்லையில் ராணுவம் பதிலடி: பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

காஷ்மீர் எல்லையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணும் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தது.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள டங்தார் எல்லைப் பகுதியில் நேற்று (திங்கள்கிழமை) பாகிஸ்தானியர்களின் ஊடுருவல் முயற்சி நடைபெற்றது. இதனை நேற்று இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.

இதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதற்குப் பதிலடியாக நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் கலியா ஐஏஎன்எஸ்ஸிடம் தெரிவிக்கையில், ''தடையை மீறி போர் நிறுத்த மீறல்களை பாக்.ராணுவம் செய்து வருகிறது. இதற்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம் டங்தார் பகுதியில் தொடரும் பாகிஸ்தானியர்களின் ஊடுருவலை முறியடித்து வருகிறது. நமது ராணுவம் நேற்றிரவு முன்னெடுத்த துல்லியமான நடவடிக்கைகளில் இரு பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x