பிற மாநிலங்களிலும் பரவும் ‘ஐ லவ் முகம்மது’ சர்ச்சை: இந்துக்கள் சார்பில் ‘ஐ லவ் மகாதேவ்’ பிரச்சாரம்

பிற மாநிலங்களிலும் பரவும் ‘ஐ லவ் முகம்மது’ சர்ச்சை: இந்துக்கள் சார்பில் ‘ஐ லவ் மகாதேவ்’ பிரச்சாரம்
Updated on
1 min read

புதுடெல்லி: உ.பி.​யின் கான்​பூரில் உள்ள ராவத்​பூரில் கடந்த 4-ம் தேதி மிலாது நபி விழா நடை​பெற்​றது. இதையொட்டி இக்​கி​ராமத்​தில் ‘ஐ லவ் முகம்​மது’ என்ற வாசகத்​துடன் மின்​சா​ரப் பலகை நிறு​வப்​பட்​டது. முதல் முறை​யான இந்​தப் பலகை மிலாது நபி ஊர்​வலத்​தி​லும் எடுத்​துச் செல்லப்பட்​டது. இதற்கு இந்​துத்​துவா அமைப்​பினர் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இதனால் முஸ்​லிம்​களின் வாசகப் பலகை அகற்​றப்​பட்​டது.

இதையடுத்து வகுப்​பு​வாதத்தை தூண்​டிய​தாக அடை​யாளம் தெரி​யாத 15 பேர் உட்பட 24 பேர் மீது உ.பி. காவல்​ துறை வழக்​குப் பதிவு செய்​தது. இந்த வழக்​குப் பதிவு நடவடிக்கை சமூக வலை​தளங்​களில் வைரலானது. நபிகள் நாயகம் மீது அன்பை வெளிப்​படுத்​து​வ​தில் யாருக்​கு என்ன பிரச்​சினை என முஸ்​லிம் தரப்பு கேள்வி எழுப்​பியது.

உ.பி.​யின் பரேலி​யில் வெள்​ளிக்​கிழமை தொழுகைக்​குப் பிறகு முஸ்​லிம்​கள் தங்​கள் வீடு​களில் ‘ஐ லவ் முகம்​மது’ சுவரொட்​டிகளை வைக்​கு​மாறு மவுலானா குர்​ஷித் ஆலம் வேண்​டு​கோள் விடுத்​தார். பரேலியைச் சேர்ந்த மவுலானா தவுகீர் ராசா இன்று (செப்​.26) போராட்​டம் அறி​வித்​துள்​ளார்.

இப்​பிரச்​சினை பிற மாநிலங்​களுக்​கும் பரவத் தொடங்​கியது. டெல்​லி​யில் நடந்த ‘ஐ லவ் முகம்​மது’ நிகழ்வு ரத்து செய்​யப்​பட்​டு, அதன் ஏற்​பாட்​டாளர் சாகிரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

உ.பி.​யின் வாராணசி, ம.பி.​யின் உஜ்ஜைன் நகரங்​களில் இந்து அமைப்​பு​கள் களத்​தில் இறங்​கின. உஜ்ஜைனில், ‘ஐ லவ்மகாகல்’ என்ற பிரச்​சா​ரம் தொடங்​கப்​பட்​டது. உ.பி.​யில் ‘ஐ லவ் மகாதேவ், ஐ லவ் ஹனு​மான்’ என எக்ஸ் தளத்​தில் பதி​விட்​டது வைரலாகத் தொடங்​கியது.

வாராணசி​யின் ஒரு பகுதி துறவி​களும் இப்​பிரச்​சினையை ஒரு நேரடி சவாலாக எடுத்​துள்​ளனர். இதுகுறித்து சங்​க​ராச்​சா​ரி​யார் நரேந்​தி​ரானந்த சரஸ்​வதி கூறுகை​யில், “இது தேர்ந்​தெடுக்​கப்​பட்ட அரசை சீர்​குலைக்​கும் சதி. 30 கோடி மக்​கள் முகம்மது​வின் பெயரில் பேரணி நடத்​தி​னால், 100 கோடி மக்​கள் மகாதே​வின் பெயரில் பேரணி நடத்​து​வார்​கள்” என அறி​வித்​துள்​ளார்.

மும்​பை​யின் மும்ப்​ரா​வில் மழையை​யும் பொருட்​படுத்​தாமல் கண்​டனப் பேரணி​கள் நடத்​தப்​பட்​டன. நாக்​பூரில் உள்ள மோமின்​பு​ரா​விலும் உத்தராகண்​டில் உள்ள காஷிப்​பூரிலும் கூட வன்​முறை வெடித்​தது.

ஏஐஎம்​ஐஎம் தலை​வர் அசாதுதீன் ஒவைசி, “நான் முகமதுவை நேசிக்​கிறேன். இது குற்​றமல்ல. இது எங்​கள் நம்​பிக்​கை​யின் ஒரு பகு​தி. அரசியலமைப்​பின் 25-வது பிரிவு எங்​களுக்கு இந்த உரிமையை வழங்​கு​கிறது” என எக்ஸ் தளத்​தில் பதி​விட்​டார்.

மக்​கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெஹபூபா முப்தி, "பாஜக தனது ஆட்சியின் தோல்விகளை மறைக்க வெறுப்பைப் பரப்புகிறது" என குற்றம் சாட்டியுள்ளார். "ஐ லவ் முகமது என்று எழுதியதற்காக வழக்குப் பதிவு செய்வது ஒரு மனநோய்" என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முதல்வருமான உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in