காஷ்மீர் சாலைகளில் போக்குவரத்து முடக்கம்: ஆயிரக்கணக்கான டன் ஆப்பிள்கள் அழுகி நாசம்

காஷ்மீரில் கனமழை, நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை - 44 மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று அணிவகுத்து நின்ற கன்டெய்னர் லாரிகள். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டுள்ளதால் கன்டெய்னரில் கொண்டு செல்லப்பட்ட ஆப்பிள்கள் அழுக தொடங்கியுள்ளன. இப்பிரச்சினை தொடர்பாக, முதல்வர் உமர் அப்துல்லா மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை ஏற்கெனவே தொடர்பு கொண்டு பேசியுள்ளார். | படம்: பிடிஐ |
காஷ்மீரில் கனமழை, நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை - 44 மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று அணிவகுத்து நின்ற கன்டெய்னர் லாரிகள். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டுள்ளதால் கன்டெய்னரில் கொண்டு செல்லப்பட்ட ஆப்பிள்கள் அழுக தொடங்கியுள்ளன. இப்பிரச்சினை தொடர்பாக, முதல்வர் உமர் அப்துல்லா மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை ஏற்கெனவே தொடர்பு கொண்டு பேசியுள்ளார். | படம்: பிடிஐ |
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இயற்கை பேரிட​ரால் சேத​மான சாலைகள் விரைந்து சீரமைக்​கப்​ப​டாத கராணத்​தால் போக்​கு​வரத்து முடங்​கி​யுள்​ளது. இதனால், ஆயிரக்​கணக்​கான டன் ஆப்​பிள்​கள் குறித்த நேரத்​துக்கு அனுப்ப முடி​யாமல் தேக்​கமடைந்து அழுகி வரு​வது விவ​சா​யிகளை​யும், வர்த்​தகர்​களை​யும் வேதனை அடைய செய்​துள்​ளது.

கடந்த மாதம் கனமழை மற்​றும் மேகவெடிப்பு காரண​மாக ஸ்ரீநகர்​-ஜம்மு தேசிய நெடுஞ்​சாலை கடுமை​யாக சேதமடைந்​துள்​ளது. ஏறக்​குறைய 300 மீட்​டர் நீளத்​துக்கு சாலைகள் வெள்​ளத்​தால் அடித்​துச் செல்​லப்​பட்டு காணா​மல் போ​யுள்​ளது. மேலும் ஆங்​காங்கே பெரிய பனிப்​பாறை சரிவு​களும் ஏற்​பட்​டுள்​ளது. குறிப்​பாக செனானி-உதம்​பூர், நஷ்ரி-பனிஹால் நெடுஞ்​சாலைகளில் பாதிப்பு அதி​க​மாக காணப்​படு​கிறது.

இதனால் போக்​கு​வரத்து முடங்கி ஏராள​மான கன்​டெய்​னர் லாரி​கள் நாள் கணக்​கில் காத்​திருக்​கும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. கடந்த 20 நாட்​களாக சாலைகள் சரிசெய்​யப்​ப​டாத​தால் கன்​டெய்​னர்​களில் உள்ள ஆப்​பிள்​கள் அழுகும் நிலைக்கு ஆளாகி​யுள்​ளது. இதனால் விவ​சா​யிகள் மற்​றும் ஆப்​பிள் வர்த்​தகர்​களுக்கு கோடிக்​கணக்​கில் இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

அழுகிய ஆப்​பிள்​களை பெட்டி பெட்​டி​யாக சாலைகளில் வீசி எறி​யும் வீடியோ தற்​போது சமூக வலை​தளங்​களில் பரவலாக பகிரப்​பட்டு வரு​கிறது. காஷ்மீரில் சாதாரண விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரத்​துக்கு இது பெரும் இழப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இந்​தி​யா​வில் 80 சதவீத ஆப்​பிள்​கள் காஷ்மீரிலிருந்து உற்​பத்தி செய்​யப்​படும் நிலை​யில் நெடுஞ்​சாலை நாள் கணக்​கில் மூடப்​பட்​டுள்​ளது அதன் விநியோகத் தொடரை கடுமை​யாக பாதித்​துள்​ளதுடன் விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரத்​தை​யும் கேள்விக்​குறி​யாக்கி உள்​ளது.

சாலைகள் கடந்த 20 நாட்​களாக சீரமைக்​கப்​ப​டாதது குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்​வர் உமர் அப்​துல்லா அதிருப்தி தெரி​வித்​துள்​ளார். மேலும் இது தொடர்​பாக அவர் மத்​திய அமைச்​சர் நிதின் கட்​கரி​யுட​னும் பேசி​யுள்​ளார். அப்​போது அடுத்த 24 மணி நேரத்​தில் இதுதொடர்​பாக ஆக்​கப்​பூர்​வ​மான நடவடிக்​கையை மேற்​கொள்​வ​தாக அப்​துல்​லா​விடம்​ கட்​கரி உறு​தி அளித்​துள்​ளார்​.

இதனிடையே ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் விளையும் ஆப்பிள்களை ரயில் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிள்களை ஏற்றிச் செல்லும் முதல் சரக்கு ரயிலை காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in