அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டும்: மணிப்பூர் மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி,  அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்ட  மக்களுடன் கலந்துரையாடினார்.
மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி, அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினார்.
Updated on
2 min read

இம்பால்: மணிப்​பூர் மக்​கள், அமைப்​பு​கள் அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்​டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் மைதே​யி - குகி சமு​தா​யங்​களுக்கு இடையே மோதல் ஏற்​பட்​டது. இதன்​காரண​மாக மாநிலம் முழு​வதும் கலவரம் வெடித்​தது. இதில் 258 பேர் உயி​ரிழந்​தனர். 1,108 பேர் காயமடைந்​தனர். 400 தேவால​யங்​கள், 132 இந்து கோயில்​கள் சேதப்​படுத்​தப்​பட்​டன. 60,000-க்​கும் மேற்​பட்​டோர் இடம்​பெயர்ந்​தனர். மணிப்​பூரில் சுமார் 2 ஆண்​டு​களுக்​கும் மேலாக வன்​முறை நீடித்தது.

இந்த சூழலில் கடந்த 4-ம் தேதி குகி சமு​தா​யத்​தின் நிர்​வாக குழு​வான குகி சோ கவுன்​சில், மைதேயி சமு​தா​யத்தை சேர்ந்த ஐக்​கிய மக்​கள் முன்​னணி​யின் மூத்த நிர்​வாகி​களு​டன் மத்​திய உள்​துறை அமைச்சக மூத்த அதி​காரி​கள் டெல்​லி​யில் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்போது குகி - மைதேயி குழுக்​கள் இடையே அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. மணிப்​பூரில் தடையற்ற வர்த்தக போக்​கு​வரத்தை உறுதி செய்ய இருதரப்​பினரும் உறுதி அளித்​தனர்.

ரூ.7,300 கோடி திட்​டங்​கள்: இந்த சூழலில் பிரதமர் மோடி அரசுமுறை பயண​மாக நேற்று மணிப்​பூர் சென்​றார். கலவரத்​தின் மைய​மாக இருந்த சூரசந்த்​பூரில் நடை​பெற்ற விழா​வில் ரூ.7,300 கோடி மதிப்​பில் பல்​வேறு வளர்ச்சி திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். சில திட்​டங்​களை தொடங்​கி​வைத்​தார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: மணிப்​பூர் மக்​களுக்கு தலை​வணங்கி மரி​யாதை செலுத்​துகிறேன். கடந்த 2014-ம் ஆண்​டுக்​கு பிறகு மணிப்​பூரின் வளர்ச்​சி​யில் மத்​திய அரசு தீவிர கவனம் செலுத்தி வரு​கிறது. மணிப்​பூர் என்​பது நம்​பிக்​கை​யின் பூமி. எதிர்​பா​ராத​வித​மாக இங்கு வன்​முறை ஏற்​பட்​டது. இதில் பாதிக்​கப்​பட்ட மக்​களை சந்​தித்​தேன். அப்​போது மணிப்​பூரில் புதிய விடியல் பிறக்​கும் என்று உறுதி அளித்​தேன்.

ஒரு காலத்​தில் வடகிழக்கு மாநிலங்​களில் தீவிர​வாத பிரச்​சினை நீடித்​தது. இதனால் வடகிழக்​கின் வளர்ச்சி பாதிக்​கப்​பட்​டது. ​பிறகு, வடகிழக்கு அமைதிப் பாதைக்கு திரும்​பியது. இப்​போது ஒட்​டுமொத்த பிராந்​தி​ய​மும் அதிவேக​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது.அதேபோல, மணிப்​பூர் மக்​கள்,அமைப்​பு​கள் அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்​டும் என்று அழைப்பு விடுக்​கிறேன். உங்​கள் பிள்​ளை​களின் எதிர்​காலத்​துக்​காக, அவர்​களது கனவு​களை பூர்த்தி செய்ய மாநிலத்​தில் அமை​தியை நிலை​நாட்ட வேண்​டும். நான் உங்​களோடு இருக்​கிறேன். மத்​திய அரசு மணிப்​பூர் மக்​களோடு இருக்​கிறது என்று உறுதி அளிக்​கிறேன்.

வன்​முறை​யால் பாதிக்​கப்​பட்ட மணிப்​பூரை மீண்​டும் வளர்ச்​சிப் பாதை​யில் அழைத்​துச் செல்ல மத்​திய அரசு அனைத்து நடவடிக்​கையும் எடுக்​கும். வன்​முறை​யில் வீடு​களை இழந்​தோருக்கு 7,000 வீடு​கள் கட்​டித் தரப்​படும். பாதிக்​கப்​பட்ட மக்​களுக்கு உதவ ரூ.500 கோடி​யில் சிறப்பு திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​படும். அமை​தி,வளம், செழு​மை​யின் சின்​ன​மாக மணிப்​பூர் உரு​வெடுக்​கும். இவ்​வாறு பிரதமர் பேசி​னார்.

சூரசந்த்​பூரில் நிவாரண முகாமில் தங்​கி​யுள்ள மக்​களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்​போது ஒரு சிறுமி, பிரதமர் மோடி​யின் படத்தை பரி​சாக வழங்​கி​னார். பேசும்​போது சில பெண்​கள் கண்​ணீர்​விட்டு அழுதனர். அவர்​களை பிரதமர் மோடி தேற்​றி​னார். மணிப்​பூரில் புதிய விடியல் பிறக்​கும் என்று அவர் உறுதி அளித்​தார்.பின்னர், தலைநகர் இம்​பாலுக்கு சென்ற பிரதமர் அங்கு ரூ.1,200 கோடி மதிப்​பிலான பல்​வேறு திட்​டங்​களை தொடங்கி வைத்​தார். சில திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

நேபாள பிரதமர் சுசீலாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து: இளைஞர்களின் போராட்டம் காரணமாக நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அந்த நாட்டின் இடைக்கால பிரதமராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி நேற்று முன்தினம் பதவியேற்றார்.

இதுகுறித்து மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு நேபாளம். இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று ரீதியான தொடர்புகள் உள்ளன. அந்த நாட்டின்இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றுள்ளார். 140 கோடி இந்தியர்கள் சார்பில் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நேபாளத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளம் திரும்ப அவர் நடவடிக்கை எடுப்பார். பெண்கள் சக்தியின் உதாரணமாக சுசீலா விளங்குகிறார். வன்முறையை கைவிட்டு ஜனநாயக மரபுகளை காக்கும் நேபாள மக்களை வாழ்த்துகிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in