மசூதியில் தேசிய சின்னம் பொறித்த பலகை சேதம்: முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற தால் ஏரியின் வடக்கு கரையில் ஹஸ்ரத்பால் மசூதி உள்ளது. இதை ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் வக்பு வாரியம் நிர்வகித்து வருகிறது. இந்த மசூதி புதுப்பிக்கப்பட்டு தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட திறப்பு விழா பலகை வைக்கப்பட்டது. அதை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று முன்தினம் சேதப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவருமான உமர் அப்துல்லா கூறும்போது, “மசூதியில் உள்ள தேசிய சின்னம் சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அதேநேரம், மத வழிபாட்டுத் தலத்தில் தேசிய சின்னம் பொறிக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

வேறு எந்த மத வழிபாட்டுத் தலத்திலும் இதுபோன்று சின்னம் பொறித்ததை நான் பார்த்ததே இல்லை. கோயில்கள், மசூதிகள், குருத்வாராக்கள் ஆகியவை மத வழிபாட்டுத் தலங்கள்தானே தவிர, அவை அரசு நிறுவனங்கள் அல்ல” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in