Published : 02 Jul 2018 08:49 AM
Last Updated : 02 Jul 2018 08:49 AM

மக்களவை எம்.பி.க்கள் கேள்வி கேட்க கட்டுப்பாடு

மக்களவை எம்.பி.க்கள் தற்போது நாளொன்றுக்கு 10 கேள்விகளை எழுப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களவையில் நாள்தோறும் 230 கேள்விகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. இதனால் அவை அலுவல்கள் பாதிக்கப்படுகின்றன.

இதை கருத்திற் கொண்டு மக்களவை எம்.பி.க்கள் இனிமேல் நாளொன்றுக்கு 5 கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஐந்து கேள்விகளுக்கு மேல் நோட்டீஸ் வழங்கினால் அவை அடுத்த நாள் அலுவலில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த புதிய நடைமுறை வரும் மழைக்கால கூட்டத்தொடரில் அமலுக்கு வருகிறது.

இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை மக்களவை செயலாளர் சிநேகலதா ஸ்ரீவாஸ்தவா வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x