Published : 03 Apr 2014 03:03 PM
Last Updated : 03 Apr 2014 03:03 PM

வருணுக்கு மேனகா அறிவுரை: ராகுலை புகழ்ந்த விவகாரம்

பாஜகவின் இளம் தலைவர்களில் ஒருவரான வருண் காந்தி உத்தரப் பிரதேசம் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய வருண், அமேதி தொகுதியில் சுயஉதவி குழுக்கள் மூலம் பெண்களின் சமூக அந்தஸ்தை உயர்த்தும் பணியை ராகுல் காந்தி மிகச் சிறப்பாக செய்துள்ளார் என்று புகழாரம் சூட்டினார்.

இது பாஜக வட்டாரத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து வருணின் தாயார் மேனகா காந்தி பிலிபிட் நகரில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

வருண் அப்பாவி இளைஞர். அவரது இதயம் சுத்தமானது. அமேதி தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் தவறானவை.

இதுதொடர்பாக எனது மகனிடம் பேசினேன். எந்தக் கருத்தையும் வெளியிடும் முன்பு உணர்வுபூர்வமாக செயல்படக் கூடாது, அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும் என்று அவருக்கு அறிவுரை கூறியுள்ளேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x