Published : 02 Jul 2018 08:44 AM
Last Updated : 02 Jul 2018 08:44 AM

டெல்லியில் ஒரே வீட்டில் 11 பேர் உடல்கள் மீட்பு: கொலையா என போலீஸார் விசாரணை

டெல்லியில் ஒரே வீட்டில் 11 பேர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தற்கொலையா, கொலையா என போலீஸார் விசாரிக்கின்றனர்.

வடக்கு டெல்லியில் புராரி பகுதியில் சன்ட் நகர் என்ற இடத்தில் ஒரு குடும்பத்தினர் தங்களுக்கு சொந்தமான வீட்டிலேயே ஒரு மளிகைக்கடை நடத்தி வந்தனர். நேற்று காலை நீண்ட நேரமாகியும் கடை திறக்கப்படாததுடன் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் வந்து பார்த்தபோது வீட்டில் 11 பேர் தூக்கில் தொங்கியபடி இறந்திருப்பது தெரிந்தது. அவர்களது கண்களும் கட்டப்பட்டிருந்தன.

இதுகுறித்து போலீஸ் இணை கமிஷனர் ராஜேஷ் குரானா கூறும்போது, “இது தற்கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். கொலையாக இருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம். சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆராய்ந்து வருகிறோம்” என்றார். தகவல் அறிந்து வந்த முதல்வர் கேஜ்ரிவால் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x