Published : 03 Jul 2018 03:55 PM
Last Updated : 03 Jul 2018 03:55 PM
இந்துமதக் கடவுளை அவமதித்து கருத்து தெரிவித்த தெலுங்கு நடிகரும் திரைப்பட விமர்சகருமான காதி மகேஷ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு இந்து அமைப்புகளைச் சார்ந்த சிலர் காவல் நிலையத்தில் இந்துமதக் கடவுள்களான ராமரையும் சீதையையும் பற்றி தாக்கி உள்ளூர் தொலைக்காட்சியில் இழிவான கருத்துகளைப் பேசியுள்ளதாக புகார் அளித்தனர். இதன்மூலம் இந்து மக்களின் நம்பிக்கைகளை காயப்படுத்தியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இவர்களின் புகாரை அடிப்படையாகக் கொண்டு நடிகர் காதி மகேஷ் மீது 295 ஏ (மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கத்தோடு வேண்டுமென்றே தீங்கிழைக்கும் செயல்கள்) பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றும் 505 (எந்தவொரு வர்க்கத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிராக அல்லது தனிநபர்களுக்கோ எதிராக தூண்டிவிடும் நோக்கத்தோடு செயல்படுதல்) என்ற பிரிவின்கீழும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பஞ்சாரா ஹில்ஸ் காவல்நிலைய ஆய்வாளர் கே.ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து நேற்றிரவு நடிகர் மகேஷ் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் ஒரு மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இவ்வழக்கு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக தேவைப்படும் போதெல்லாம் காவல் நிலையத்திற்கு அவர் வரவேண்டும் என்றும் அவரிடம் நேரடியாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மகேஷ் கைது செய்யப்பட்டாரா என்ற கேள்விக்கு, ''அவர் விசாரணை செய்யப்பட்டார். பின்னர் விடுவிக்கப்பட்டார்'' என்று போலீஸ் உயரதிகாரி தெரிவத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT