ஹோமியோபதி மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளிக்கலாம்: மகாராஷ்டிர அரசின் அறிவிப்புக்கு ஐஎம்ஏ கடும் எதிர்ப்பு

ஹோமியோபதி மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளிக்கலாம்: மகாராஷ்டிர அரசின் அறிவிப்புக்கு ஐஎம்ஏ கடும் எதிர்ப்பு
Updated on
1 min read

மும்பை: ஹோமியோபதி மருத்​து​வர்​கள், அலோபதி சிகிச்சை அளிக்​கலாம். அலோபதி மருந்​துகளை பரிந்​துரை செய்​ய​லாம் என்று மகா​ராஷ்டிர அரசு அறி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக அரசாணை​யும் வெளி​யிடப்​பட்டு உள்​ளது.

கடந்த 2014-ம் ஆண்​டில் மகா​ராஷ்டிர மருத்​துவ கவுன்​சில் சட்​டத்​தில் திருத்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. இதன்​படி மருந்​தி​யல் சான்​றிதழ் படிப்பை நிறைவு செய்த ஆயுர்​வேத, சித்த, ஹோமியோபதி மருத்​து​வர்​கள், அலோபதி சிகிச்சை அளிக்​கலாம், அலோபதி மருந்​துகளை பரிந்​துரைக்​கலாம் என்று அறிவிக்​கப்​பட்​டது.

இதை எதிர்த்து இந்​திய மருத்​து​வர்​கள் சங்​கம் (ஐஎம்ஏ) சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. கடந்த 2015-ம் ஆண்​டில் இந்த வழக்கை உச்ச நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது. இதைத் தொடர்ந்து மகா​ராஷ்டிர சுகா​தார அறி​வியல் பல்​கலைக்​கழகம் சார்​பில் கடந்த 2016-ம் ஆண்​டில் சிசிஎம்பி என்ற மருந்​தி​யல் படிப்பு தொடங்​கப்​பட்​டது.

இந்த சூழலில் மகா​ராஷ்டிர மருத்​துவ கவுன்​சில் கடந்த ஜூன் 30-ம் தேதி ஓர் அரசாணையை வெளி​யிட்​டது. அதில், “நவீன மருந்​தி​யல் சான்​றிதழ் படிப்​பில் தேர்ச்சி பெற்ற ஹோமியோபதி மருத்​து​வர்​கள் மகா​ராஷ்டிர மருத்​துவ கவுன்​சிலில் முறைப்​படி பதிவு செய்​ய​லாம். அதன்​பிறகு அவர்​கள் அலோபதி சிகிச்சை அளிக்​கலாம். அலோபதி மருந்​துகளை பரிந்​துரை செய்​ய​லாம்’’ என்று அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.

மகா​ராஷ்டிர அரசின் முடிவை ஹோமியோபதி மருத்​து​வர்​கள் வரவேற்று உள்​ளனர். இதுகுறித்து அவர்​கள் கூறும்​போது, “பல்​வேறு எம்​பிபிஎஸ் மருத்​து​வர்​கள், தங்​கள் நோயாளி​களுக்கு சித்த, ஆயுர்​வேத, ஹோமியோபதி மருந்​துகளை பரிந்​துரை செய்​கின்​றனர். நாங்​கள் முறை​யாக மருந்​தி​யல் சான்​றிதழ் படிப்பை நிறைவு செய்​துள்​ளோம். எங்​கள் நோயாளி​களுக்கு தேவை​யான அலோபதி மருந்​துகளை பரிந்​துரை செய்ய எங்​களுக்கு உரிமை இருக்​கிறது. மகா​ராஷ்டிர அரசின் முடிவை முழு​மனதோடு வரவேற்​கிறோம்’’ என்று தெரி​வித்​தனர்.

ஆனால் மகா​ராஷ்டிர அரசின் அறி​விப்​புக்கு இந்​திய மருத்​து​வர்​கள் சங்​கம் (ஐஎம்ஏ) கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து மகா​ராஷ்டிர ஐஎம்ஏ தலை​வர் சந்​தோஷ் கூறும்​போது, “மகா​ராஷ்டி​ரா​வின் மூத்த அரசி​யல் தலை​வர்​கள், பல்​வேறு ஹோமியோபதி மருத்​து​வக் கல்​லூரி​களை நடத்​துகின்​றனர். அவர்​களின் அழுத்​தத்​தால் மகா​ராஷ்டிர அரசு புதிய அரசாணையை வெளி​யிட்டு இருக்​கிறது. இந்த அரசாணையை எதிர்த்து சட்​டரீ​தி​யாக போராடு​வோம்’’ என்று தெரி​வித்​தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in