Published : 05 Jul 2025 06:15 AM
Last Updated : 05 Jul 2025 06:15 AM

கேரளாவில் பழுதாகி 19 நாட்களாக நிற்கும் பிரிட்டிஷ் போர் விமானத்தை கொண்டு செல்ல இங்கிலாந்து பரிசீலனை

புதுடெல்லி: பிரிட்​டன் கடற்​படைக்கு சொந்​த​மான எப்​-35பி ரக விமானம் கடற்​பரப்​பில் கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்​த​போது திடீரென ஏற்​பட்ட தொழில்​நுட்ப கோளாறு காரண​மாக கேரளா​வின் திரு​வனந்​த​புரம் விமான நிலை​யத்​தில் 19 நாட்​களுக்கு முன்பு அவசர​மாக தரை​யிறக்​கப்​பட்​டது.

அதி நவீன போர் விமான​மாக கருதப்​படும் இது உலகின் மிக​வும் அதி​கபட்ச விலை​யுடைய விமான​மாக கருதப்​படு​கிறது. ஒரு விமானத்​தின் விலை 110 மில்​லியன் டாலர். அதாவது இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.924 கோடி என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. இந்த நிலை​யில், எப்​-35பி விமானத்தை பழுது​பார்க்​கும் முயற்​சிகள் தோல்​வியடைந்து விட்​டதையடுத்து அதனை சி-17 குளோப்​மாஸ்​டர் சரக்கு விமானம் மூல​மாக மீண்​டும் பிரிட்​ட​னுக்கே கொண்டு செல்ல பரிசீலிக்​கப்​பட்டு வரு​கிறது. எப்​-35பி விமானத்தை சரக்கு விமானத்​தில் ஏற்ற வேண்​டு​மா​னால் அதற்கு லாக்​ஹீட் மார்​டினில் பயிற்சி பெற்ற பொறி​யாளர்​கள் மட்​டுமே அதனை செய்து முடிக்க முடி​யும்.

வகைப்​படுத்​தப்​பட்ட தொழில்​நுட்​பத்​துடன் கூடிய போர் விமானம் பிரித்​தெடுக்​கப்​படும்​போது அதனை பிரிட்​டிஷ் ராணுவம் உன்​னிப்​பாக கண்​காணிக்​கும். இறக்​கைகள் அகற்​றப்​பட்டு சரக்கு விமானத்​தில் ஏற்​றப்பட வேண்​டும். எப்​-35பி போர் விமானம் ரேடார் தடுப்​பான்​களைக் கொண்​டுள்​ளது. இது செயற்கை நுண்​ணறிவு மற்​றும் தரவு இணைவு, மறை​குறி​யாக்​கப்​பட்ட மென்​பொருள் மற்​றும் நவீன வான்​வழிப் போருக்​கான சென்​சார்​களு​டன் பயன்​படுத்​தப்​படு​கிறது.

சுற்​றுலா துறை​யின் தூது​வ​ர்: இந்​திய சுற்​றுலா துறைக்​கான எதிர்​பா​ராத நட்​சத்​திர​மாக பிரிட்​டனின் எப்​-35 பி போர் விமானம் மாறி​யுள்​ளது. குறிப்​பாக, கேரளா​வின் பாரம்​பரி​யத்தை பிர​திபலிக்​கும் தென்​னை, பனை மரங்​கள் நிறைந்த கடற்​கரைகள், கலாச்​சா​ரம் ஆகிய​வற்றை சுற்​றுலாப் பயணி​களிடம் ஊக்​குவிக்​கும் விளம்பர தூது​வ​ராக தற்​போது அந்த விமானம் மாறி​யுள்​ளது.

தென்னை மரங்​கள் சூழ தார்ச்​சாலை​யில் நிறுத்​தப்​பட்​டுள்ள போர் விமானத்​தின் ஏஐ-​யால் உரு​வாக்​கப்​பட்ட படத்தை கேரள சுற்​றுலாத்​துறை சமூக வலை​தளத்​தில் பதி​விட்​டது. அந்த ஊடகப் பதி​வில், பிரிட்​டன் ஜெட் விமானம் கேரள மாநிலத்​திற்கு ஐந்து தங்க நட்​சத்​திரங்​களை வழங்​கி, அதை ‘‘ஒரு அற்​புத​மான இடம். அதனால்​தான் நான் வெளி​யேற விரும்​ப​வில்​லை. நிச்​சய​மாக இதை உங்​களுக்கு பரிந்​துரைக்​கிறேன்,’’ என்று ஜெட் வி​மானம் கூறு​வது​போல்​ மேற்​கோள்​ காட்​டப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x