Last Updated : 04 Jul, 2025 07:40 AM

4  

Published : 04 Jul 2025 07:40 AM
Last Updated : 04 Jul 2025 07:40 AM

காவடி யாத்திரை கடைகள் சர்ச்சை: ‘கோபால்’ பெயரில் வேலை செய்ததாக பணியாளர் தஜும்முல் ஒப்புதல்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்​தில் விரை​வில் ஸ்வரண மாதத்தை முன்​னிட்டு காவடி யாத்​திரை தொடங்க உள்​ளது. யாத்​திரை செல்​லும் சாலைகளில் உள்ள உணவகங்​களில் கடை உரிமை​யாளர் பெயர் உட்பட முழு விவரங்​களை அறி​விப்பு பலகை​களில் எழுதி வைக்க மாநில அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

இந்த உத்​தரவு பின்​பற்​றப்படுகிறதா என்று பிரபல துறவி யஷ்வீர் மஹராஜின் சீடர்​கள் 5,000 பேர் ஆங்​காங்கே சோதனை நடத்தி வரு​கின்​றனர். அவர்​களில் ஒரு குழு​வினர் முசாபர்​நகரின் ‘பண்​டிட்ஜி வைஷ்னோவ் தாபா’வை முஸ்​லிம்​கள் நடத்​து​வ​தாக கண்​டு​பிடித்​தனர். அப்​போது, அங்கு வேலை செய்​தவர்​களின் கீழாடைகளை அகற்றி சோதித்​தனர். இது பெரும் சர்ச்​சை​யானது. ஆனால், அங்கு வேலை செய்​யும் ஒரு​வர் நேற்று உண்​மையை வெளி​யிட்​டுள்​ளார்.

இதுகுறித்து செய்​தி​யாளரிடம் ஆதார் அட்​டையை காட்டி அந்த ஊழியர் கூறும்​போது, “எனது உண்​மை​யான பெயர் தஜும்​முல். என்னை கோபால் என்ற பெயரில் வேலை செய்ய உரிமை​யாளர் கேட்​டுக் கொண்​டார். எனக்கு வேலை வேண்​டும் என்​ப​தால் பொய் கூறி வேலை​யில் செய்​தேன். எனது உரிமை​யாள​ரும் ஒரு முஸ்​லிம். அவரது பெயர் ஸரம்​பர்” எனத் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து சமாஜ்​வாதி எம்​எல்ஏ ரவி​தாஸ் மல்​ஹோத்ரா கூறுகை​யில், “கடை நடத்​தும் பிற்​படுத்​தப்​பட்​டோர், தலித், சிறு​பான்​மை​யினருக்கு உ.பி. அரசு அநி​யா​யம் செய்​கிறது. பெயர் கேட்​பது, பேன்ட்டை கழற்​று​வது என கொடுமை​கள் தொடர்​கின்​றன. சாதி, மதம் கேட்டு தாக்​குதல் நடத்​தும் தீவிர​வா​தி​களை போல் உ.பி. அரசு விவரங்​களை கேட்​கிறது” என்று தெரி​வித்​தார். சமாஜ்​வாதி எம்​.பி.எஸ்​.டி.ஹசனும் இதே கருத்தை தெரி​வித்​துள்​ளார்.

இவர்​களது கருத்​துக்கு பாஜக தேசிய செய்தி தொடர்​பாளர் சுதான்ஷு திரிவேதி கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். பாஜக முன்​னாள் எம்​.பி. துறவி சாத்வீ பிராக்சி கூறும்​போது, “இந்​துக்​கள் பெயரில் தாபா நடத்த நினைத்​தால், அவர்​கள் இந்து மதத்​தில்​ சேர்ந்​து விட​வேண்​டும்​” என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x