ராஜா ரகுவன்சியை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மீட்பு

ராஜா ரகுவன்சி
ராஜா ரகுவன்சி
Updated on
1 min read

போபால்: ராஜா ரகுவன்சியை கொலை செய்ய குவாஹாட்டியில் இருந்து ஆயுதம் வாங்கியது தெரியவந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ ரகுவன்சிக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, ரகுவன்சியும் அவரது மனைவி சோனமும் மேகாலயாவுக்கு ஹனிமூன் சென்றனர். அங்கு ரகுவன்சி கொல்லப்பட்டார்.

சோனம் தனது ஆண் நண்பர்களுடன் இணைந்து ரகுவன்சியை கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பான வழக்கில் சோனம் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக விஷால் சவுகான் என்பவர் அரிவாளால் ரகுவன்சியை வெட்டிக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை போலீஸார் கைப்பற்றி உள்ளனர். அந்த அரிவாள் அசாம் மாநிலம் குவாஹாட்டி ரயில் நிலையம் அருகே வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in