Published : 07 Jul 2018 08:34 AM
Last Updated : 07 Jul 2018 08:34 AM
கேரளாவில் பாஜக தொண்டரை கொலை செய்த வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கேரள மாநிலம் தலசேரியில் 2008-ம் ஆண்டு ஆட்டோ டிரைவர் மகேஷ் என்பவர் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். ஆத்திரம் அடைந்த மார்க்சிஸ்ட் கட்சியினர் மகேஷை கொலை செய்தனர். இதுதொடர்பாக 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பாஜக - மார்க்சிஸ்ட் தொண்டர்களிடையே அடிக்கடி மோதல்கள் எழுந்தன. இந்த வழக்கு தலசேரி மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கொலையில் குற்றம்சாட்டப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT