Published : 23 Jul 2018 02:46 PM
Last Updated : 23 Jul 2018 02:46 PM
மேற்கு ஒடிசாவில் உள்ள பர்லா என்ற நகரில் ஞாயிறு காலை முடிந்த 24 மணி நேரத்தில் 622 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 36 ஆண்டுகளில் இல்லாத பேய்மழையாகும். இதனால் பலபகுதிகள் நீரில் மூழ்கின.
இந்த அதிகன மழைக்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். கடலுக்குள் சென்ற 3 மீனவர்கள் காணவில்லை.
பர்லாவில் உள்ள ஹிராகுத் அணைத்திட்டத்தின் தலைமைக் கட்டுப்பாட்டு அறை இம்மாநிலத்தில் ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக மழையளவு பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஒடிசாவின் சராசரி மழைப் பதிவு 81.3மிமீ.
11 மீனவர்கள் மீட்பு:
பாலசோர் மாவட்டம் கீர்த்தானியாவிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 17 பேர் கொண்ட குழுவில் 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று 2 மீனவர்கள் நீந்திக் கரை சேர்ந்தனர். ஆனாலும் 3 மீனவர்கள் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.
கலிமாட்டி கிராமத்தில் வெள்ள நீரில் பெண் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT