Published : 06 Jun 2025 06:36 AM
Last Updated : 06 Jun 2025 06:36 AM
குப்பம்: சித்தூர் மாவட்டம், குப்பம் அருகே உள்ள வி.கோட்டா மாட்லபல்லி கிராமத்தை சேர்ந்த குஷால், நிகில், ஜெகன் ஆகியோர் 8-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் தினமும் மாட்ல பல்லி ஏரியில் நீச்சல் பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் வழக்கம் போல் நீச்சல் பழக நேற்று அதே ஏரிக்கு சென்றனர். அப்போது இதில் ஒரு மாணவர் நீரில் மூழ்குவதை பார்த்து மற்ற இருவரும் அந்த மாணவரை காப்பாற்ற சென்றனர். ஆனால், 3 பேரும் பரிதாபமாக நீரில் மூழ்கினர். இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து உடனடியாக 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். அதற்குள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3-வது சிறுவன் காப்பாற்றப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT