Published : 01 Jun 2025 06:28 AM
Last Updated : 01 Jun 2025 06:28 AM

ஆந்திராவில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்: துணை முதல்வர் பவன் கல்யாண் தகவல்

ஆந்திராவில் இன்று முதல் முதியோர், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று நேரடியாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக துணை முதல்வர் பவன் கல்யாண் கூறினார்.

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஆந்திராவில் ஜூன் 1-ம் தேதி முதல் புதிய விதிமுறைகளுடன் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. அதன்படி, 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று நேரடியாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.

ரேஷன் கடைகளில் இனி மாதத்தில் 1 முதல் 15-ம் தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் பிறகு மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.

கடந்த ஜெகன் ஆட்சியில் ரேஷன் கடைகளை மூடிவிட்டு, ரூ.1600 கோடி செலவில் மாநிலம் முழுவதும் ரேஷன் விநியோக வாகனங்கள் இயக்கப்பட்டன. இவை மாதத்தில் 2 நாட்கள் மட்டும் இயங்கின. இதனால் ரேஷன் பொருட்கள் அனைவருக்கும் கிடைக்கவில்லை. ரேஷன் பொருட்கள் கடத்தப்பட்டன. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்டு, விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பவன் கல்யாண் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x