Last Updated : 17 May, 2025 07:11 AM

3  

Published : 17 May 2025 07:11 AM
Last Updated : 17 May 2025 07:11 AM

உ.பி.யில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த பல் மருத்துவரால் இருவர் உயிரிழந்ததாக புகார்

அனுஷ்கா திவாரி

புதுடெல்லி: இளம் வயதில் தலை முடி கொட்​டு​வ​தால், தம்மை அழகாக்​கிக் கொள்ள ஆண், பெண் இரு​பாலரும் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்​கின்​றனர். இதற்​காக உ.பி.யின் கான்​பூரில் டாக்​டர் அனுஷ்கா திவாரி நடத்தி வந்த மருத்​து​வ​மனைக்கு இளம் பொறி​யாளர்​கள் 2 பேர் சிகிச்​சைக்​காக வந்​துள்​ளனர்.

அவர்​களில் உ.பி.​யின் பரூக்​கா​பாத்தை சேர்ந்த பொறி​யாளர் மயங்க் கட்​டி​யார் என்​பவர் கடந்த நவம்​பர் 18-ல் அனுஷ்கா மருத்​து​வ​மனை​யில் முடி மாற்று அறுவை சிகிச்சை பெற்​றார். ஆனால் 24 மணி நேரத்​துக்கு பிறகு முகம் வீங்​கி, மயங்​கின் உடல்​நிலை மோசமடைந்​தது. மறு​நாள் 19-ல் மயங்க் உயி​ரிழந்​தார். அதே​போல் கான்​பூர் பவர் ஹவுஸ் பகு​தியை சேர்ந்த பொறி​யாளர் வினீத் துபே​வும், முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு மார்ச் 15-ல் உயி​ரிழந்​துள்​ளார்.

இரு​வரது குடும்ப உறுப்​பினர்​களும் டாக்​டர் அனுஷ்கா மீது புகார் அளித்​தனர். போலீ​ஸார் நடவடிக்கை எடுக்​க​ாததால் முதல்​வர் ஆதித்​ய​நாத்​தின் இணை​யதளத்​தில் புகார்​கள் பதிவேற்​றப்​பட்​டன.

இதையடுத்து வினீத் மனைவி அளித்த புகாரின்​படி கல்​யாண்​பூர் பகுதி காவல் நிலை​யப் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரிக்க தொடங்கி உள்​ளனர். இந்த தகவல் பரவியதும் முடி மாற்று அறுவை சிகிச்​சை​யால் பாதிக்​கப்​பட்ட வேறு பலரும் டாக்​டர் அனுஷ்கா மீது புகார் அளித்​தனர். இதனால், மருத்​து​வ​மனையை மூடி​விட்டு அனை​வரும் தலைமறை​வாகி விட்​டனர்.

போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், முடி மாற்று அறுவை சிகிச்​சைக்​கான எந்த தகு​தி​யும், பயிற்​சி​யும் டாக்​டர் அனுஷ்கா​வுக்கு இல்லை என தெரிந்​துள்​ளது. இந்த சிகிச்​சைக்​காக டாக்​டர் அனுஷ்கா ஒவ்​வொரு​வரிடம் ரூ.40,000 முதல் ஒரு லட்​சம் வரை பெற்றுள்ளார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கல்​யான்​பூர் பகுதி காவல் துறை உதவி ஆணை​யர் அபிஷேக் பாண்டே கூறும்​போது, ‘‘டாக்​டர் அனுஷ்கா பல் மருத்​து​வம் மட்​டுமே பயின்​றவர் என விசா​ரணை​யில் தெரிந்​துள்​ளது. தலைமறை​வானவர்​களை தீவிரமாக தேடி வரு​கிறோம்’’ என்​றார். மேலும், உ.பி.​யின் மற்ற பகு​தி​களில் முடி மாற்​று அறு​வை சிகிச்​சை செய்​பவர்​களிட​மும்​ போலீ​ஸார்​ வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x