Published : 10 May 2025 08:55 AM
Last Updated : 10 May 2025 08:55 AM

சீனாவின் வெடிக்காத ஏவுகணை பஞ்சாபில் கண்டெடுப்பு 

பஞ்சாபின் ஹோசியார்பூர் பகுதியில் வெடிக்காத ஏவுகணை ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து பாஜக.,வின் ஐ.டி பிரிவு தலைவர் அமித் மால்வியா எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘‘சீனாவின் பிஎல்-15 ரக ஏவுகணை பஞ்சாபின் ஹோசியார்பூரில் மீட்கப்பட்டுள்ளது.

இது பாகிஸ்தான் விமானப்படைக்கு சீனா வழங்கிய ஜே.எப்-17 ரக போர் விமானத்தில் இருந்து வீசப்பட்ட தொலை தூர ஏவுகணையாக இருக்கலாம். இது வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணை குறித்து ஆய்வு நடத்தப்படும் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x