Last Updated : 08 May, 2025 03:57 PM

2  

Published : 08 May 2025 03:57 PM
Last Updated : 08 May 2025 03:57 PM

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு: இந்திய பதிலடியில் லாகூர் வான் பாதுகாப்பு அமைப்பும் சேதம்

பாகிஸ்தானின் கராச்சியில் இந்தியா தாக்குதல் நடத்திய பகுதி

புதுடெல்லி: இந்தியாவின் 15 ராணுவ இலக்குகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. மேலும், இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலை, இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானின் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார்களையும், அமைப்புகளையும் குறிவைத்தன. லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டதாக நம்பத்தகுந்த முறையில் அறியப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி துறைகளில் உள்ள பகுதிகளில் சிறிய பீரங்கிகள் மற்றும் கனரக பீரங்கிகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே அதன் தூண்டுதலற்ற துப்பாக்கிச் சூட்டின் தீவிரத்தை அதிகரித்துள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு (மே 07) அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், பூர்தலாஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பட்டிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தரலாய் மற்றும் பூஜ் உள்ளிட்ட வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள பல ராணுவ இலக்குகளை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்க பாகிஸ்தான் முயன்றது.
இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் அவை முறியடிக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களின் சிதைவுகள் இப்போது பாகிஸ்தானிய தாக்குதல்களை நிரூபிக்கும் பல இடங்களில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றன.

ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி பகுதிகளில் மோர்டார் மற்றும் கனரக பீரங்கிகளைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே பாகிஸ்தான் தனது துப்பாக்கிச் சூட்டின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.

16 பேர் பலி: பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு காரணமாக மூன்று பெண்கள், ஐந்து குழந்தைகள் உட்பட 16 அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன. இப்பகுதிகளில், பாகிஸ்தானின் மோர்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களுக்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x