Published : 30 Apr 2025 08:10 AM
Last Updated : 30 Apr 2025 08:10 AM

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் அங்கே செல்லுங்கள்: பவன் கல்யாண் கருத்து

மங்களகிரி: காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் கடந்த 22-ம் தேதி தீவிர​வா​தி​களால் சுட்​டுக்​கொல்​லப்​பட்ட அப்​பாவி மக்​களுக்கு நேற்று ஆந்​திர மாநிலம், மங்​களகிரி​யில் உள்ள ஓர் அரங்​கில் இரங்​கல் கூட்​டம் நடை​பெற்​றது.

நிகழ்ச்​சி​யில் துணை முதல்​வர் பவன்​ கல்​யாண் கலந்து கொண்டு பேசி​ய​தாவது: மதம் குறித்து எது​வும் பேசாத சுற்​றுலா சென்ற அப்​பாவி மக்​கள் 26 பேரை சுட்டுக்கொன்​றாலும், அந்த தீவிர​வா​தி​களுக்​கும், அவர்​களை ஊக்​கு​வித்த பாகிஸ்​தான் நாட்​டுக்​கும் இங்கு ஆதர​வாக பேசுவது மிக​வும் தவறு. ஆயினும் நாங்​கள் அப்​படித்​தான் பேசுவோம் என்று கூறு​பவர்​கள் அந்த நாட்​டுக்கே சென்றுவிடுங்​கள்.

தீவிர​வாதத்​துக்கு எதி​ராக அனை​வரும் ஒரே மாதிரி நடந்து கொள்​வது அவசி​யம். காஷ்மீர் நமது நாட்​டின் ஓர் அங்​கம். ஆனால், ஓட்​டுக்​காக அரசி​யல் நாடகம் ஆடக்​கூ​டாது. பஹல்​காமில் தீவிர​வா​தி​களின் துப்​பாக்கிச் சூட்​டில் உயி​ரிழந்த நெல்​லூர் மாவட்​டத்தை சேர்ந்த மதுசூதன் ராவின் குடும்​பத்​தா​ருக்கு ஜனசேனா கட்சி சார்​பில் ரூ.50 லட்​சம் நிதி உதவி செய்​யப்​படு​கிறது. இதன் மூலம் ஜனசேனா கட்சி ஒரு சிறந்த நிர்​வாகியை இழந்​துள்​ளது.

இறந்துபோன மதுசூதன்​ராவ் யாருக்கு தீங்​கிழைத்​தார்? காஷ்மீரும் நமது நாட்​டின் ஒரு பகுதி என்​ப​தால் மதுசூதன் ராவின் மனைவி அங்கு சுற்​றுலா செல்​லலாமென வலி​யுறுத்​தி​ய​தால் மதுசூதன் ராவின் குடும்​பம் காஷ்மீர் சென்​றது. அங்கு அவர் தீவிர​வா​தி​களால் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். இந்​துக்​களுக்கு என இருக்​கும் ஒரே நாடு இந்​தியா மட்​டும்​தான். இங்கு கூட இந்​துக்​கள் வெளி​யில் செல்​லக்​கூ​டாது என்​றால் எப்​படி? இவ்​வாறு பவன் கல்​யாண் பேசி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x