Published : 29 Apr 2025 06:31 AM
Last Updated : 29 Apr 2025 06:31 AM

மே 1 முதல் ஏழுமலையான் கோயிலில் விஐபி பிரேக் தரிசனத்தில் மாற்றம்

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய 10 மணி முதல் 12 மணி நேரம் வரை ஆகிறது. பக்தர்களின் கூட்டத்தை கவனத்தில் கொண்டு, வரும் மே 1-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை தரிசனம் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது எனவும் நேரில் வரும் விஐபி பக்தர்களுக்கு வழக்கம்போல் விஐபி பிரேக் தரிசனம் அமல்படுத்தப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்த விஐபி பிரேக் தரிசனத்தை வெள்ளோட்டமாக மே 1 முதல் காலை 6 மணிக்கு அனுமதிக்கலாம் எனவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

மே மாத விசேஷங்கள்: மே 1-ம் தேதி அனந்தாழ்வார் ஜெயந்தி தொடக்கம், 2-ம் தேதி ராமானுஜர் ஜெயந்தி மற்றும் ஸ்ரீ சங்கரர் ஜெயந்தி, 6 முதல் 8-ம் தேதி வரை பத்மாவதி திருக்கல்யாணம், 10-ம் தேதி அனந்தாழ்வார் சாத்துமுறை, 11-ம் தேதி நரசிம்மர் ஜெயந்தி மற்றும் தரிகொண்டா வெங்கமாம்பாள் ஜெயந்தி, 12-ம் தேதி கூர்ம ஜெயந்தி மற்றும் அன்னமாச்சாரியார் ஜெயந்தி, 12-ம் தேதி பவுர்ணமி கருட சேவை, 14-ம் தேதி பராசர பட்டர் வருட திருநட்சத்திரம், 22-ம் தேதி அனுமன் ஜெயந்தி, 31-ம் தேதி நம்மாழ்வார் உற்சவம் தொடக்கம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x