Published : 26 Apr 2025 01:20 AM
Last Updated : 26 Apr 2025 01:20 AM

பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க ஏப்.28-ல் ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு பேரவை கூட்டம்

ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஷ் சின்ஹா

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதுகுறித்து விரிவான முறையில் விவாதிக்க ஏப்ரல் 28-ல் ஜம்மு-காஷ்மீர் சிறப்பு கூட்டத்துக்கு துணை நிலை ஆளுநர் மனோஷ் சின்ஹா அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஆளுநர் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019, பிரிவு 18(1)-ன் அதிகாரத்தை பயன்படுத்தி ஜம்மு-காஷ்மீர் சிறப்பு பேரவை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 28) காலை 10.30 மணிக்கு பேரவை கூடும். இவ்வாறு உத்தரவில் கூறப்பபட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “ சுற்றுலாப் பயணிகள் 26 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற பிறகான நிலவரம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த சிறப்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது" என்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிறப்பு பேரவை கூட்டத்தை கூட்ட ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சர்கள் குழு கடந்த புன்கிழமை துணை நிலை ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x