சத்தீஸ்கர் என்கவுன்டரில் 3 மாவோயிஸ்ட்டுகள் உயிரிழப்பு

சத்தீஸ்கர் என்கவுன்டரில் 3 மாவோயிஸ்ட்டுகள் உயிரிழப்பு
Updated on
1 min read

சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் நேற்று நடைபெற்ற என்கவுன்ட்டரில் 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் மாவோயிஸ்ட் ஒழிப்பு பணியில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 10,000 வீரர்கள் கடந்த திங்கள் கிழமை முதல் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் தெலங்கானா அருகேயுள்ள , சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தின் கரேகுட்டா மலைப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் இரு தரப்பினர் நீண்ட நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

இந்த இடத்தில் இருந்து இதுவரை 3 மாவோயிஸ்ட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தச் சண்டையில் மேலும் பல மாவோயிஸ்ட்டுகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையில் தெலங்கானா போலீஸாரும் உதவி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in