Published : 22 Apr 2025 07:30 AM
Last Updated : 22 Apr 2025 07:30 AM

4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் - பிரதமர் மோடி சந்திப்பு

புதுடெல்லி: இந்​தியா வந்​துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் நேற்று பிரதமர் மோடியை சந்​தித்​துப் பேசி​னார். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் 4 நாள் அரசு முறை பயண​மாக நேற்று டெல்லி வந்​தடைந்​தார். அவருடன் மனை​வி​யும் இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்​தவரு​மான உஷா வான்​ஸ், 3 குழந்​தைகள் வந்​துள்​ளனர்.

டெல்லி பாலம் விமான நிலை​யம் வந்​தடைந்த வான்ஸை மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் வரவேற்​றார். துணை அதிப​ரான பிறகு முதல் முறை​யாக இந்​தியா வந்​துள்ள வான்​ஸுக்கு முப்​படை அணிவகுப்பு மரி​யாதை வழங்​கப்​பட்​டது. பின்​னர் டெல்​லி​யில் உள்ள சுவாமி நாராயணன் அக்​சர்​தாம் கோயிலுக்கு வான்ஸ் குடும்​பத்​தினர் சென்​றனர். பின்​னர் மத்​திய குடிசைத் தொழில்​கள் மையத்​துக்கு சென்​றனர்.

இதுகுறித்து ஜே.டி.​வான்ஸ் எக்ஸ் தளத்​தில், “இந்த அழகான இடத்​துக்கு (அக்​சர்​தாம் கோயில்) வந்த எங்​களுக்கு சிறப்​பான வரவேற்பு கொடுத்​தமைக்கு மிக்க நன்​றி. மிக​வும் அழகான இந்த கோயிலை எங்​கள் குழந்​தைகள் நேசித்​தார்​கள். கடவுள் ஆசிர்​வ​திக்​கட்​டும்” என கூறி​யுள்​ளார். நேற்று மாலை பிரதமர் நரேந்​திர மோடியை அவரது இல்​லத்​தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது, வர்த்​தகம், பாது​காப்பு மற்​றும் பொருளா​தா​ரம் உள்​ளிட்ட துறை​களில் இருதரப்பு உறவை மேலும் பலப்​படுத்​து​வது குறித்து இரு​வரும் பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

இந்​தியா உள்​ளிட்ட உலக நாடு​கள் மீதான பரஸ்பர (இறக்​கும​தி) வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 90 நாட்​களுக்கு நிறுத்தி வைத்​துள்​ளார். இதனிடையே, இரு நாடு​களுக்​கிடையே இந்த ஆண்டு இறு​திக்​குள் வர்த்தக ஒப்​பந்​தம் மேற்​கொள்​வது என பிரதமர் மோடி அமெரிக்கா சென்​றிருந்​த​போது இரு தலை​வர்​களும் ஒப்​புக் கொண்​டனர். ஆனால் இருதரப்பு வர்த்தக ஒப்​பந்​தத்தை முன்​கூட்​டியே இறுதி செய்​வது குறித்து பிரதமர் மோடி​யும் ஜே.டி.​வான்​ஸும் நேற்று ஆலோ​சனை நடத்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது. பின்​னர் வான்​ஸுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்​தார்.

இதையடுத்​து, நேற்று இரவு ஜே.டி.​வான்ஸ் குடும்​பத்​தினர் ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூர் சென்​றடைந்​தனர். இன்று அவர்​கள் அமீர் கோட்​டையை பார்​வை​யிடு​கின்​றனர். பின்​னர் ராஜஸ்​தான் சர்​வ​தேச மையத்​தில் நடை​பெறும் அமெரிக்​க-இந்​திய வர்த்தக உச்சி மாநாட்​டில் வான்ஸ் பங்​கேற்​கிறார். இரு நாடு​களைச் சேர்ந்த பிர​தி​நி​தி​கள் பங்​கேற்​கும் இந்​தக் கூட்​டத்​தில், இருதரப்பு வர்த்​தகம் மற்​றும் முதலீடு குறித்து வான்ஸ் உரை​யாற்​று​வார் எனத் தெரி​கிறது.

வான்ஸ் குடும்​பத்​தினர் நாளை ஆக்ரா நகருக்கு சென்று தாஜ்மஹாலை பார்​வை​யிடு​கின்​றனர். பின்​னர் அங்​கிருந்து மீண்​டும் ஜெய்ப்​பூர் செல்​லும் அவர்​கள் ஜெய்ப்​பூர் நகர அரண்​மனையை பார்​வை​யிடு​கின்​றனர். 24-ம் தேதி ஜெய்ப்​பூரில் இருந்து ஜே.டி.​வான்ஸ் குடும்​பத்​தினர் அமெரிக்கா புறப்​பட்​டுச் செல்​கின்​றனர்.

குர்த்தா பைஜாமா: ஜே.டி.​வான்​ஸ், மனைவி உஷா 2 மகன்​கள் ஒரு மகளு​டன் இந்​தியா வந்​துள்​ளார். விமானத்தில் இருந்து அவர்​களின் மூத்த மகன் இவான் இந்​திய பாரம்​பரிய உடை​யான குர்த்தா பைஜாமா அணிந்​த​படி இறங்கி வந்​தான். அடுத்​த​படி​யாக 2-வது மகன் விவேக்​கும் குர்த்தா பைஜாமா அணிந்​த​படி வந்​தான். பின்​னர் அனார்க்​கலி உடை அணிந்​திருந்​த 3 வயது இளைய மகள்​ மிராபெலை ஊழியர்​ ஒருவர்​ அழைத்​து வந்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x