கடல் வழியாக சரக்குகளை எடுத்து செல்லும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

கடல் வழியாக சரக்குகளை எடுத்து செல்லும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
Updated on
1 min read

கடல் வழியாக சரக்குகளை எடுத்து செல்லும் மசோதா 2024 நாடாளுமன்ற மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவை தாக்கல் செய்த பிறகு நடைபெற்ற விவாதத்தின்போது அமைச்சர் சர்பானந்த சோனாவால் பேசியதாவது:

இந்த புதிய சட்டம் காலனித்துவ கால சட்டங்களை அகற்றுவதற்கும், வணிகம் செய்வதற்கு எளிதாக கடல்சார் விதிமுறைகளை எளிமையாக்கும் மத்திய அரசின் பரந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாகும்.

1925-ம் ஆண்டு கடல் மூலம் இந்திய சரக்குகளை எடுத்துச் செல்லும் சட்டத்தை மாற்றியமைக்கும் இந்த மசோதா, இந்தியாவின் கடல்சார் சட்டத்தை சர்வதேச மரபுகளுடன் சீரமைக்கிறது. மேலும், கடல் வழியாக சரக்குகளை எடுத்துச் செல்வதை நிர்வகிக்கும் விதிகளை இந்த மசோதா நவீனமயமாக்க முயல்கிறது.

கப்பல் துறையில் பொருட்களை கொண்டு செல்லும் நிறுவனங்களுக்கு தெளிவான பொறுப்புகள், பொறுப்புகள், உரிமைகள் மற்றும் விலக்குகளை வழங்குவதையும், சுமுகமான அமலாக்கத்தை உறுதி செய்வதையும் இந்த மசோதா முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. அனைத்து பங்குதாரர்களையும் குழுவில் இணைத்துள்ளோம், எங்களின் நோக்கம் சட்டத்தை எளிமையாகவும் சிறப்பாகவும் புரிந்துகொள்வதாகும். இவ்வாறு சர்பானந்த சோனாவால் பேசினார்.

விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் கடல் வழியாக சரக்குகளை எடுத்து செல்லும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா முதன் முதலில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 -ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in