Published : 11 Mar 2025 05:07 AM
Last Updated : 11 Mar 2025 05:07 AM

வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடு குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: “​நாட்​டில் பல மாநிலங்​களில் வாக்​காளர் பட்​டியலில் முரண்​பாடு​கள் உள்​ளது குறித்து மக்​களவை​யில் விவாதம் நடத்த வேண்​டும்” என்று எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் வலி​யுறுத்​தி​னார்.

நாடாளு​மன்​றத்​தில் பட்​ஜெட் கூட்​டத்​தொடரின் 2-வது கட்​டம் நேற்று தொடங்​கியது. மக்​களவை காலை கூடியதும் எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி பேசி​னார். அப்​போது அவர் கூறும்​போது, “நாட்​டின் பல மாநிலங்​களில் வாக்​காளர் பட்​டியலில் முரண்​பாடு​கள் உள்​ள​தாக புகார்​கள் எழுந்​துள்​ளன. மகா​ராஷ்டிர சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​காளர் பட்​டியலில் பெரும் முரண்​பாடு​கள் இருந்​துள்​ளன. இதுகுறித்து மக்​களவை​யில் விரி​வான விவாதம் நடத்த வேண்​டும் என்று அனைத்து எதிர்க்​கட்​சிகளும் கூறுகின்​றன” என்று வலி​யுறுத்​தி​னார்.

பின்​னர் அவர் நாடாளு​மன்​றத்தை விட்டு வெளி​யில் வந்​ததும், “வாக்​காளர் பட்​டியல் முரண்​பாடு​கள் குறித்து மக்​களவை​யில் விவாதம் நடக்​கு​மா?” என்று செய்​தி​யாளர்​கள் கேட்​டனர். அதற்கு ராகுல் பதில் அளிக்​கை​யில், “நான் அப்​படி நினைக்​க​வில்​லை” என்​றார். மக்​களவை​யில் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி எம்​.பி. சுகதா ராய் பேசும்​போது, “வாக்​காளர் அடை​யாள அட்டை எண் ஹரி​யானாவில் இருக்​கும் பலருக்​கும் மேற்கு வங்​கத்​தில் இருக்​கும் பலருக்​கும் ஒரே மாதிரி​யாக இருக்​கின்​றன. இது மிக​வும் தீவிர​மான பிரச்​சினை. இது​போல் ஒரே எண் 2 மாநிலங்​களை சேர்ந்​தவர்​களுக்கு இருப்​பது, மேற்கு வங்​கம், அசாம் போன்ற மாநிலங்​களில் வரவிருக்​கும் சட்​டப்​பேர​வைத் தேர்லை பாதிக்​கும். எனவே, வாக்​காளர் பட்​டியல் முரண்​பாடு குறித்து தலைமை தேர்​தல் ஆணை​யம் மறு ஆய்வு செய்ய வேண்​டும்” என்​றார்.

ஆம் ஆத்மி எம்​.பி. சஞ்​சய் சிங் பேசும்​போது, “தேர்​தல் ஆணை​ய​மும் மத்​திய அரசும் சேர்ந்து போலி வாக்​காளர் பட்​டியலை தயாரித்து வரு​கின்​றன. மகா​ராஷ்டி​ரா, ஹரி​யா​னா, டெல்​லி​யில் இதே​போல் வாக்​காளர் பட்​டியலில் முரண்​பாடு காணப்​படு​கிறது. இது நேர்​மை​யான தேர்​தலை சீர்​குலைக்​கும். இது அரசி​யல் சர்​வா​தி​காரத்​துக்​கும் ஊழலுக்​கும் வழி​வகுக்​கும்” என்​றார்.

இந்த விவ​காரம் தொடர்​பாக மேற்​கு​வங்​கத்​தில் ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் பிர​தி​நி​தி​கள், கொல்​கத்​தா​வில் உள்ள தேர்​தல் அலு​வல​கத்​துக்கு சென்று புகார் அளித்​தனர். வாக்​காளர் பட்​டியலை நேரடி​யாக ஆய்வு செய்ய வேண்​டும். தனித்​து​வ​மான அடை​யாள அட்​டைகளுக்கு தனித்​தனி எண் இருப்​பதை உறுதி செய்ய வேண்​டும் என்று வலி​யுறுத்​தினர்.

முன்​ன​தாக கடந்த 2-ம் தேதி தலைமை தேர்​தல் ஆணை​யம் இதுகுறித்து விளக்​கம் அளித்​தது. அதில், “2 எண்​கள் 2 மாநிலங்​களில் ஒன்று போல் இருந்​தா​லும், சம்​பந்​தப்​பட்ட வாக்​காளர் அவருக்​கான மாநிலம், தொகு​தி, வாக்​குச் சாவடி​யில்​தான் வாக்​களிக்க முடி​யும். ஒரு மாநிலத்​தைச் சேர்ந்​தவர் அந்த அடை​யாள அட்​டையை வைத்து வேறு மாநிலத்​தில் வாக்​களிக்க முடி​யாது. எனினும், இது​போன்ற முரண்​பாடு​களை நீக்க ஒவ்​வொரு வாக்​காள​ருக்​கும் தனித்​து​வ​மான அடை​யாள எண் வழங்​கு​வதற்​காக, எரோநெட் இணை​யதளத்தை மேம்​படுத்த நடவடிக்​கைகள்​ எடுக்​கப்​பட்​டு வரு​கின்​றன” என்​று தெரி​வித்​தது குறிப்​பிடத்​தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x