Published : 09 Mar 2025 03:42 AM
Last Updated : 09 Mar 2025 03:42 AM

பெண்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்: நிதி திரட்டுவதில் இந்தியாவுக்கு 2-ம் இடம்

புதுடெல்லி: பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நிதி திரட்டுவதில் இந்தியா 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

டிராக்ஸ் நிறுவனத்தின் ஆய்வுப்படி, இந்தியாவில் பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. இது மொத்த ஸ்டார்ட்-அப்களில் 7.5% ஆகும். பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்-அப்கள் அதிக அளவில் செயல்படும் நகரங்களில், தகவல் தொழில்நுட்பத் தலைநகரமான பெங்களூரு முதலிடம் வகிக்கிறது.

இந்நிலையில், பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நிதி திரட்டுவதில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா 2-ம் இடம் இடத்திலும் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் இதுவரை ரூ.2.26 லட்சம் கோடி நிதி திரட்டி உள்ளன. இதில் கடந்த 2021-ல் மட்டும் அதிகபட்சமாக ரூ.55 ஆயிரம் கோடி திரட்டி உள்ளன. அதிக நிதி திரட்டிய நகரமாக பெங்களூரு உள்ளது. மும்பை, டெல்லி அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x