

புதுடெல்லி: கேரள சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
இதற்காக அவர், கேரள காங்கிரஸ் தலைவர்களுடன் நிற்கும் பழைய புகைப்படத்தை பகிர்ந்து “ஒளிமையமான எதிர்காலத்தை நோக்கி, அவர்கள் ஒன்றிணைந்து நிற்கிறார்கள்” என்ற கருத்தை பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி உயர்மட்ட தலைவர்கள் அடங்கிய கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘‘காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அரசியல் வியூகத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். கட்சி கொள்கைக்கு முரணான அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். பிரதமர் மோடி, கேரள இடதுசாரி அரசு ஆகியவற்றை காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பாராட்டி வரும் நிலையில் ராகுல் இவ்வாறு கூறியுள்ளார்.