Published : 17 Feb 2025 06:01 AM
Last Updated : 17 Feb 2025 06:01 AM
திருப்பதி: திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் காரணமாக பக்தர்களுக்கு புதியநிபந்தனைகள் விதிக்கப்பட் டுள்ளன. திருப்பதியில் அலிபிரி மலைப்பாதையில் தற்போது சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பதை அறிந்த தேவஸ்தானம், பக்தர்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்துள் ளது. அதன்படி, காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரைமலையேறி செல்லும் பக்தர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இல்லை. மதியம் 2 மணிக்கு பிறகு, 70 முதல் 100 பேர் கொண்ட பக்தர்கள் கூட்டம், கூட்டமாக அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் இவர்கள் இரவு 9.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த கும்பலில் 12 வயதுக்குட்பட்டோருக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT