Last Updated : 13 Feb, 2025 05:37 AM

 

Published : 13 Feb 2025 05:37 AM
Last Updated : 13 Feb 2025 05:37 AM

குழந்தை ராமர் சிலையை பாதுகாத்த தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ் காலமானார்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசா​ரியாக இருந்​தவர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ். இவருக்கு கடந்த சில மாதங்​களாக உடல்​நலம் குன்றி இருந்​தது. லக்னோ சஞ்சய் காந்தி இன்ஸ்​டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனை​யில் சேர்க்​கப்​பட்​டிருந்​தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.00 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 87.

கடந்த 1976-ம் ஆண்டு அயோத்தி சம்ஸ்​கிருத மகா வித்​யால​யா​வில் உதவி ஆசிரியராக சேர்ந்​தார். ராமரின் தீவிர பக்தரான சத்யேந்திர தாஸ், ராமர் கோயிலுக்கான கரசேவை​யிலும் பங்கேற்​றார். கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்​கப்​பட்ட போது உள்ளே வைக்​கப்​பட்​டு இருந்த குழந்தை ராமர் சிலைக்கு அருகில் இருந்​தார். சிலை சேதம் அடையாமல் தனது மடியில் வைத்து பத்திர​மாகப் பாது​காத்​தார்.

பிறகு இடிந்த இடத்​தில் கூடாரம் அமைத்து ராமர் சிலையை அமைத்​த​தி​லும் ஆச்சார்யா சத்யேந்திர தாஸின் முக்கிய பங்கு இருந்​துள்ளது. அயோத்​தி​யில் இந்த தற்காலிக கோயில் மீது கடந்த 2005-ம் ஆண்டு ஜுலை 5-ம் தேதி தீவிரவாத தாக்​குதல் நடைபெற்​றது. அப்போதும், ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ராமர் சிலையை பத்திரமாக பாது​காத்​துள்ளார்.

கூடாரத்​தில் அமைந்த கோயி​லில் அன்றாட பூஜை செய்ய ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், தேர்​வானார். அப்போது, ரூ.100 மட்டுமே ஊதியம் போதும் என கூறி பணியை ஏற்றார். இதற்காக அவர் தனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து விட்​டார். அதன்​பின் சுமார் 27 ஆண்டுகள் அவருக்கு ரூ.100 மட்டுமே மாத ஊதியமாக வழங்​கப்​பட்​டது.

ராமர் கோயில் கட்டப்​பட்டு 2024 ஜனவரி​யில் திறக்​கப்​பட்ட போது தலைமை பூசா​ரியாக ஆச்சார்யா சத்யேந்திர தாஸே நியமிக்​கப்​பட்​டார். மகி பூர்​ணிமா தினமான நேற்று காலமான ஆச்சார்யா சத்யேந்​திரருக்கு உ.பி. முதல்​வர் ஆ​தித்​யநாத் உள்​ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்​தினர். இவரது உடலுக்கு இன்று இறு​திச் சடங்​கு​கள்​ சர​யு ந​திக்​கரை​யில்​ செய்​யப்​பட உள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x