Published : 02 Jul 2018 04:59 PM
Last Updated : 02 Jul 2018 04:59 PM
உத்தரப் பிரதேசத்தில் உயர் மின்னழுத்தம் பாய்ந்த கம்பி அறுந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவத்தில் மூன்று உயரதிகாரிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது:
’’சாலையில் நடந்து சென்ற சங்கீதா என்பவர் மீது உயர் மின்னழுத்தம் பாய்ந்த கம்பி அறுந்து விழுந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சங்கீதா உயிரிழந்தார்.
இறந்தவரின் கணவர் நன்ஹெலால் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் மின் வாரியத்தின் நிர்வாகப் பொறியாளர் ஆர்.கே.ஸ்ரீவஸ்தவா, உதவி கோட்ட அலுவலர் சைலேந்திர சிங் மற்றும் இளநிலைப் பொறியாளர் ரமேஷ் சிங் ஆகியோர் மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304ன் கீழ் நேரடியாக கொலைக்குற்றம் செய்யவில்லையெனினும், மரணம் விளைவிக்கும் குற்றம் புரிந்ததாக இந்த மூன்று உயரதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.’’
இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT