Published : 06 Feb 2025 07:41 AM
Last Updated : 06 Feb 2025 07:41 AM

புனேவில் ஏற்பட்டுள்ள ஜிபிஎஸ் தொற்று தண்ணீர் மூலம் பரவியது கண்டுபிடிப்பு

கோப்புப்படம்

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே பகுதியில் ஏற்பட்டுள்ள ஜிபிஎஸ் (குய்லின்-பாரே) தொற்று தண்ணீர் மூலம் பரவியது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவில் கடந்த மாதம் ஜிபிஎஸ் (குய்லின்-பாரே) தொற்று பரவியது. அங்கு இதுவரை 166 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தொற்றுக்கு அங்கு ஏற்கெனவே 6 பேர் இறந்திருந்த நிலையில், சென்னையில் உள்ள குழந்தை சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 10 வயது சிறுவன் கடந்த மாதம் 31-ம் தேதி உயிரிழந்தான். இந்த சிறுவன் ஜிபிஎஸ் தொற்று காரணமாக இறந்தது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் ஜிபிஎஸ் பலி எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.

ஜிபிஎஸ் தொற்று பரவியதற்கு ‘கேம்பிளோபேக்டர் ஜெஜுனி’ என்ற பாக்டீரியா தண்ணீர் மூலம் பரவியது காரணம் என மகாராஷ்டிரா சுகாதாரத்துறை துறை ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x