Published : 31 Jan 2025 02:29 AM
Last Updated : 31 Jan 2025 02:29 AM

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: தமிழக முன்​னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்​துக் கு​விப்பு வழக்​கில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீ​ஸார் அவரது வீட்​டில் இருந்து தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட நகைகள், புடவை​கள், கைகடி​காரங்கள் உள்ளிட்​ட​வற்றை கைப்​பற்றினர். இந்த வழக்கு பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடைபெற்​ற​தால் அந்த பொருட்கள் கர்நாடக அரசின் கருவூலத்​தில் வைக்​கப்​பட்டன.

கடந்த ஆண்டு பெங்​களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, ஜெயலலி​தா​வின் நகைகளை ஏலம் விட வேண்​டும் என பெங்​களூரு குடிமை​யியல் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். இவ்வழக்கை விசா​ரித்த ``நீதிபதி ஹெச்​.ஏ.மோகன் கர்நாடக மாநில கருவூலத்​தில் உள்ள நகைகள், புடவை​கள், சொத்​துகளின் ஆவணங்களை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை​யிடம் ஒப்படைக்க வேண்​டும். சொத்​துக்கு​விப்பு வழக்கை நடத்திய கர்நாடக அரசுக்கு ரூ.5 கோடியை தமிழ்​நாடு அரசு வழங்க வேண்​டும்'' என தீர்ப்​பளித்​தார்.

இந்நிலை​யில் ஜெயலலி​தா​வின் அண்ணன் மகள் தீபா, தனது அத்தை​யின் சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்க கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்​யப்​பட்​டது. இவ்வழக்கு நேற்று முன் தினம் பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றத்​தில் நீதிபதி ஹெச்​.​வி.மோகன் முன்னிலை​யில் விசா​ரணைக்கு வந்தது.

அப்போது, ‘‘கர்​நாடக கருவூலத்​தில் உள்ள ஜெயலலி​தாவுக்கு சொந்​தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி​களிடம் பிப்​ரவரி 14, 15-ம் தேதி​களில் ஒப்படைக்க வேண்​டும். இதனை தமிழக அரசின் உள்துறை இணை செயலா​ளர், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி, ஆபரண மதிப்​பீட்​டாளர்
ஆகியோர் முறையாக கணக்​கிட்டு பெற்று கொள்ள வேண்​டும். 6 பெட்​டிகள், வாக​னம் ஆகிய​வற்​றை​யும் ​கொண்டுவர வேண்​டும்'' என்று உத்​தர​விட்​டார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x