Published : 26 Jan 2025 05:38 AM
Last Updated : 26 Jan 2025 05:38 AM
புதுடெல்லி: ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்புத் துறை, பாதுகாப்புப் படை வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 942 பேரின் பெயர் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இந்த விருதுகள் வீரதீரமாக செயலாற்றியது. மெச்சத்தக்க வகையில் சேவை புரிந்தது மற்றும் மிகச் சிறப்பான பணிகள் என்ற வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள காவல்துறை, தீயணைப்புத் துறை, பாதுகாப்புப் படை வீரர்களின் வீரதீர செயல்கள், மெச்சத்தக்க சேவை, மிகச் சிறப்பான பணி ஆகியவற்றை கவுரவிக்கும் வகையில் 746 விருதுகள் மற்றும் பதக்கங்கள் என மொத்தம் 942 விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று அறிவித்தார். அவற்றில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு 95 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிஆர்பிஎப் வீரர்கள் 19 பேர். எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் 5 பேர் குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதிகள், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் மிகத் துணிச்சலாக பணியாற்றி பாதுகாப்பை உறுதி செய்ததற்காக 19 சிஆர்பிஎப் வீரர்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT