Last Updated : 22 Jul, 2018 08:45 AM

 

Published : 22 Jul 2018 08:45 AM
Last Updated : 22 Jul 2018 08:45 AM

பெங்களூரு கிளப்பில் ரூ.100 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கியது- ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும் பறிமுதல்

பெங்களூரு பவுரிங் இன்ஸ்டிடியூட் கிளப்பில் உள்ள 2 லாக்கர்களில் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும், ரூ. 100 கோடி சொத்து ஆவணங்களும் சிக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள செயிண்ட் மார்க்ஸ் சாலையில் 130 ஆண்டுகள் பழமையான பவுரிங் இன்ஸ்டிடியூட் கிளப் உள்ளது. இதில் பெரிய பணக்காரர்கள், உயர் அதிகாரிகள், பிரபலங்கள் மட்டுமே உறுப்பினராக முடியும். இதில் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி அவினாஷ் அமர்லால் கடந்த 10 ஆண்டுகளாக உறுப் பினராக உள்ளார். இந்நிலையில் இந்த விடுதியில் 2 லாக்கர்களில் அவினாஷ் அமர்லால் தனது பொருட்களை வைத்திருந்தார்.

அவரது பொருட்களை எடுத்துச் செல்லுமாறு நிர்வாகம் 7 முறை நோட்டீஸ் அனுப்பியது. உரிய பதில் வராததால் நேற்று காவல் துறையினர் முன்னிலையில் 2 லாக்கர்களும் திற‌க்கப்பட்டன. அதில் ரூ.3.09 லட்சம் ரொக்கப் பணமும், ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளும் சிக்கின. மேலும் ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்களும் இருந்தன. இதனை விடுதி நிர்வாகம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தது.

பெங்களூரு தனியார் விடுதி லாக்கரில் ரூ. 100 கோடி மதிப்பி லான சொத்து ஆவணங்கள் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x