Published : 22 Jul 2018 09:19 AM
Last Updated : 22 Jul 2018 09:19 AM
வரும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) சேர மாட்டோம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்களுக்கு அதிகார பசி கிடையாது. மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை. ஆந்திர மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் 2014-ல் என்டிஏ கூட்டணியில் தெலுங்கு தேசம் இணைந்தது.
மாநில பிரிவினை மசோதாப்படி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். ஆனால் 4 ஆண்டுகள் கடந்த பிறகும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இதன் மூலம் மத்திய அரசு ஆந்திர மக்களை வஞ்சித்துவிட் டது.
எனவேதான் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தோம். பாஜகவின் பெரும்பான்மைக்கும் எங்களது அறநெறிக்கும் இடையிலான போர்தான் இந்தத் தீர்மானம். எனினும் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவளித்த மற்ற கட்சிகளுக்கு நன்றி.
எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாகக் கூறி, வரும் 2019 மக்களவை தேர்தலில் ஆதரவளிக்க வேண்டும் என பாஜக அணுகினாலும் நாங்கள் என்டிஏ கூட்டணியில் சேர மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT