Published : 21 Jan 2025 05:25 AM
Last Updated : 21 Jan 2025 05:25 AM

திருப்பதி மலைப் பாதையில் தொடர் விபத்தால் பக்தர்கள் அச்சம்

கோப்புப் படம்

திருப்பதி மலைப்பாதையில் தொடரும் விபத்துகளால் பக்தர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல அலிபிரியில் இருந்து ஒரு பாதையும், அங்கிருந்து திருப்பதிக்கு வர ஒரு பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1944-ம் ஆண்டு முதல் பாதை அமைக்கப்பட்டது. இது 19 கி.மீ தூரம் கொண்டதாகும். இது திருமலையில் இருந்து திருப்பதிக்கு வர தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது மலைப்பாதை கடந்த 1974-ல் அலிபிரி அடிவாரத்தில் இருந்து திருமலைக்கு அமைக்கப்பட்டது. கடல்மட்டத்தில் இருந்து 3200 அடி உயரத்தில் திருமலை உள்ளது. இந்நிலையில் இந்த மலைப்பாதைகள் அதிக வளைவுகள் கொண்டதாக இருப்பதால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. திருமலையின் 2-வது மலைப்பாதையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 விபத்துகள் நடந்தன. இதில் 3 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன ராவ் என்பவர் தனது குடும்பத்தாருடன் காரில் திருமலைக்கு சென்று சுவாமியை தரிசித்து விட்டு, மீண்டும் திருப்பதிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, 7-வது மைல் அருகே கார் தடுப்புசுவர் மீது மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினாலும் ஹர்ஷவர்தன் எனும் சிறுவம் காயம் அடைந்தார். இதுபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை 7-வது மைல் அருகே ஆந்திர அரசுப் பேருந்து தடுப்புச் சுவர் மீது மோதியது. இதில் 2 பெண்கள் காயம் அடைந்தனர். திருமலை பாதையில் தற்போது அடிக்கடி விபத்துகள் நடப்பதால் பக்தர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x