‘இரு அரசுகளின் பாராமுகம்’ - டெல்லி எய்ம்ஸில் காத்திருந்த நோயாளிகளை சந்தித்த ராகுல் சாடல்

‘இரு அரசுகளின் பாராமுகம்’ - டெல்லி எய்ம்ஸில் காத்திருந்த நோயாளிகளை சந்தித்த ராகுல் சாடல்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சுற்றி சாலை, நடைபாதை, சுரங்கப்பாதைகளில் தங்கியிருந்த நோயாளிகள், உறவினர்களை சந்தித்த ராகுல் காந்தி, மத்திய மற்றும் டெல்லி அரசுகள் இவர்கள் மீது பாராமுகமாக இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று (வியாழக்கிழமை) எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெளியே தங்கியிருந்த நோயாளிகள், அவர்களின் உறவினர்களை சந்தித்து, அவர்களின் குறைகள், பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் இந்தியில் வெளியிட்டுள்ள பதிவில், "நோய் சுமை, கடும் குளிர், அரசின் பாராமுகம் - தொலைதூரங்களில் இருந்து சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையைத் தேடிவந்து வெளியே தங்கியிருக்கும் நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை இன்று சந்தித்தேன்.

சிகிச்சைகாக வந்திருக்கும் அவர்கள் சாலைகள், சுரங்கப்பாதைகளில் தங்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். குளிர், பசி, வசதியின்னமைக்கு மத்தியில் நம்பிக்கைச் சுடரை மட்டும் பற்றிக்கொண்டு காத்திருக்கின்றனர்.

மத்திய மற்றும் டெல்லி அரசுகள் இரண்டும் பொதுமக்களுக்கான தங்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் முற்றிலும் தவறிவிட்டன.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in