Published : 16 Jan 2025 02:53 AM
Last Updated : 16 Jan 2025 02:53 AM

சென்னை விமான நிலையத்தில் விரைவு குடியேற்ற சேவை திட்டம்: அமித் ஷா இன்று தொடங்குகிறார்

அகமதாபாத்: சென்னை உட்பட 7 விமான நிலை​யங்​களில் விரைவான குடியேற்ற சேவை திட்​டத்தை (பாஸ்ட் டிராக் இமிகிரேஷன்)மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைக்கிறார்.

நாடு முழு​வதும் 21 முக்கிய விமான நிலை​யங்​களில் நம்பகமான பயணி​யருக்கான விரைவான குடியேற்ற சேவை திட்டம் (எப்​டிஐ-டிடிபி) செயல்​படுத்​தப்பட உள்ளது.

இத்திட்​டத்தை டெல்லி இந்திரா காந்தி விமான நிலை​யத்​தின் 3 முனை​யத்​தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆண்டு ஜூன் 22-ம் தேதி தொடங்கி வைத்​தார்.

இதையடுத்து மும்பை, சென்னை, கொல்​கத்தா, பெங்​களூரு, ஹைதரா​பாத், கொச்சி, அகமதாபாத் ஆகிய 7 விமான நிலை​யங்​களில் இத்திட்டம் இன்று தொடங்​கப்​படுகிறது. அகமதாபாத்​தில் இருந்து மத்திய அமைச்சர் அமித் ஷா இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பயணி​களுக்கு உலகத்​தரம் வாய்ந்த வசதிகளை வழங்​க​வும் சர்வதேச பயணத்தை தடையற்​ற​தாக​வும் பாது​காப்​பாக​வும் ​மாற்​ற​ இத்​திட்​டம் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x