Published : 16 Jan 2025 02:53 AM
Last Updated : 16 Jan 2025 02:53 AM
அகமதாபாத்: சென்னை உட்பட 7 விமான நிலையங்களில் விரைவான குடியேற்ற சேவை திட்டத்தை (பாஸ்ட் டிராக் இமிகிரேஷன்)மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைக்கிறார்.
நாடு முழுவதும் 21 முக்கிய விமான நிலையங்களில் நம்பகமான பயணியருக்கான விரைவான குடியேற்ற சேவை திட்டம் (எப்டிஐ-டிடிபி) செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தை டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தின் 3 முனையத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆண்டு ஜூன் 22-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இதையடுத்து மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, அகமதாபாத் ஆகிய 7 விமான நிலையங்களில் இத்திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. அகமதாபாத்தில் இருந்து மத்திய அமைச்சர் அமித் ஷா இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்கவும் சர்வதேச பயணத்தை தடையற்றதாகவும் பாதுகாப்பாகவும் மாற்ற இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT