Published : 16 Jan 2025 02:38 AM
Last Updated : 16 Jan 2025 02:38 AM

போலி டிக்கெட்டுகள் மூலம் திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: சென்னை டாக்ஸி ஓட்டுநர் உட்பட 5 பேர் கைது

திருமலை: ​திருப்பதி ஏழுமலை​யான் கோயி​லில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கடந்த 10-ம் தேதி முதல் பக்தர்கள் சொர்க்க வாசல் தரிசனம் செய்து வருகின்​றனர்.

இந்நிலை​யில், 11 பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்ய ரூ.300 டிக்​கெட்டு​களுடன் திரு​மலை​யில் வைகுண்ட க்யூ காம்ப்​ளக்ஸ் வழியாக சென்​றனர். அங்கு டிக்​கெட்டை ஸ்கேன் செய்த போது அவை போலி என்று தெரியவந்தது.

இதுகுறித்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அந்த 11 பேரிடம் விசா​ரித்​தனர். அப்போது அவர்கள் திருப்பதி தீயணைப்பு துறை ஊழியர் மணிகண்டா என்பவர் மூலம் 11 டிக்​கெட்டுகளை ரூ.19 ஆயிரம் கொடுத்து வாங்​கியதாக தெரி​வித்தனர். மணிகண்​டாவை பிடித்து விசா​ரித்த​போது, அவர் இடைத்​தரகர் போல் செயல்​பட்டு திருப்​ப​திக்கு வரும் பக்தர்​களிடம் திருப்பதி டாக்ஸி ஓட்டுநர் சிவா மற்றும் சென்னை டாக்ஸி ஓட்டுநர் ஜெகதீஷ் ஆகியோர் மூலம் அதிக பணம் வசூலித்​துள்ளார். தரிசன கவுன்ட்​டரில் பணியாற்றும் தேவஸ்தான ஊழியர் லட்சுமிபதி மூலம் போலியாக ரூ.300 டிக்​கெட்டுகளை வாங்கி தரிசனத்​துக்கு பக்தர்களை அனுப்பி வைப்பது தெரிய வந்தது. இதற்கு மற்றொரு தீயணைப்பு படை வீரர் பானுபிர​காஷும் உடந்​தையாக இருந்​துள்ளார். இதனை தொடர்ந்து அவர்​கள் 5 பேரை​யும் ​போலீ​ஸார் கைது செய்து ​விசாரணை நடத்தி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x