Last Updated : 26 Jul, 2018 08:01 AM

 

Published : 26 Jul 2018 08:01 AM
Last Updated : 26 Jul 2018 08:01 AM

நிக்காஹ் ஹலாலா பெயரில் கூட்டாக இளம்பெண் பலாத்காரம்: கணவர் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு

மேற்கு உ.பி.யின் ராம்பூரைச் சேர்ந்தவர் ரிஸ்வான் (36). இவர் 7 வருடங்களுக்கு முன் முகீமா என்பவருடன் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன. இந்நிலையில் 13 மாதங்களுக்கு முன் இவர் முகீமாவை மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்தார். பிறகு அவரையே மீண்டும் மணமுடிப்பதாகக் கூறிய ரிஸ்வான், அதற்கு நிக்காஹ் ஹலாலா முறையை கடைப்பிடிக்கச் செய்துள்ளார். இதன்படி ராஷீத் (30) என்பவருடன் முகீமா மணமுடித்துள்ளார். ஆனால் ராஷீத், நிக்காஹ் ஹலாலாவின்படி மணம் முடித்த மறுநாள் தலாக் கொடுக்காமல் 3 மாதங்களுக்கு பிற்கு முகீமாவிற்கு தலாக் அளித்துள்ளார்.

இதற்கிடையே முகீமாவை மறுமணம் செய்துகொள்வதாகக் கூறிய ரிஸ்வான், வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்ததாகவும் கடந்த 3 மாதங்களில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் முகீமா புகார் கூறியுள்ளார். கூட்டு பலாத்காரம் மற்றும் அதற்கு உதவியதாக தனது கணவர் ரிஸ்வான், இரண்டாவது கணவர் ராஷீத், இரண்டாவதாக திருமணம் செய்து வைத்த மவுல்வி வஹீத், மாமனார் ஷகீல் அகமது, அவரது இளைய மகன் அம்ஜத் அலி, மாமியார் பிர்தவுஸ் ஜஹான், நாத்தனார்கள் ஷகீரா ஜஹான், ஷகிலா ஜஹான் என 9 பேர் மீது ராம்பூரின் அஜீம் நகர் காவல் நிலையத்தில் முகீமா புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீஸார் 9 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ராம்பூரை அடுத்துள்ள பரேலி மாவட்டத்தில் இதுபோன்ற புகார் கடந்த 16-ம் தேதி அளிக்கப்பட்டது. அதில் அப்பெண்ணின் மாமனார் ஜமீல் உசைன் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நிக்காஹ் ஹலாலாவுக்கு எதிரான முதல் எப்ஐஆர் இதுவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x