2025-ஐ சீர்திருத்த ஆண்டாக அறிவித்தது பாதுகாப்பு அமைச்சகம்: காரணம் என்ன?

ராஜ்நாத் சிங் | கோப்புப் படம்
ராஜ்நாத் சிங் | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: 2025-ம் ஆண்டை சீர்திருத்த ஆண்டாக அறிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், இது ஆயுதப்படைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போருக்குத் தயாராக உள்ள படையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் அனைத்து செயலாளர்களுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பல்வேறு திட்டங்கள், சீர்திருத்தங்கள் மற்றும் முன்னோக்கி செல்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது. தற்போது நடைமுறையில் உள்ள மற்றும் எதிர்கால சீர்திருத்தங்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், 2025-ம் ஆண்டை பாதுகாப்பு அமைச்சகத்தில் 'சீர்திருத்த ஆண்டாக' கடைபிடிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இது ஆயுதப்படைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போருக்குத் தயாராக உள்ள படையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும். 2025 ஆம் ஆண்டில் கவனம் செலுத்த பின்வரும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டன:

ஆயுதப்படைகளின் நவீனமயமாக்கல் பயணத்தில் 'சீர்திருத்தங்களுக்கான ஆண்டு' ஒரு முக்கிய படியாக இருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். "இது நாட்டின் பாதுகாப்பானது தயார்நிலையில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றங்களுக்கு அடித்தளம் அமைக்கும், இதனால் 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு மத்தியில் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதி செய்ய இத்துறை தயாராகிறது" என்று அவர் கூறினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in