Published : 11 Dec 2024 01:45 AM
Last Updated : 11 Dec 2024 01:45 AM

ஒரே நாடு ஒரே தேர்தல்: நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் விரைவில் மசோதா தாக்கல்

புதுடெல்லி: மக்களவைக்​கும், மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களின் சட்டப் பேரவை​களுக்​கும் ஒரே நேரத்​தில் தேர்தல் நடத்த வகை செய்​யும் ‘ஒரே நாடு, ஒரே தேர்​தல்’ திட்​டத்தை மத்திய அரசு முன்னெடுத்​துச் செல்​ல​வுள்​ளது.

இந்தத் திட்​டத்​துக்கான சாத்​தி​யக்​கூறுகள் குறித்து ஆராய்ந்த குடியரசு முன்​னாள் தலைவர் ராம்​நாத் கோவிந்த் தலைமையிலான உயர்​மட்டக் குழு சமர்ப்​பித்த அறிக்கையை, மத்திய அமைச்​சரவை கடந்த செப்​டம்​பரில் ஏற்றுக் கொண்​டது. மக்களவை, மாநில சட்டப்​பேர​வை​கள், நகராட்​சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய அரசாங்​கத்​தின் மூன்று அடுக்​கு​களுக்​கும் 2029 முதல் ஒரே நேரத்​தில் தேர்தல் நடத்​த​வும், தொங்கு நாடாளு​மன்​றம், சட்டப்​பேரவை ஏற்பட்​டால், ஒன்றிணைந்த அரசாங்​கத்​துக்கான ஏற்பாடுகளை செய்​ய​வும் இந்த திட்டம் வகை செய்​கிறது. இந்நிலை​யில் இதுதொடர்பான மசோதாவை நடப்பு நாடாளு​மன்றத் கூட்டத் தொடரில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற மத்திய அரசு முடிவு செய்​துள்ள​தாகத் தெரி​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x