வயிற்றில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டுடன் 15 பயணிகளை காப்பாற்றிய ஜீப் டிரைவர்

வயிற்றில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டுடன் 15 பயணிகளை காப்பாற்றிய ஜீப் டிரைவர்
Updated on
1 min read

ஆரா: வயிற்றில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டுன் ஜீப்பை இயக்கிய டிரைவர், அதில் பயணித்த 15 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி உள்ள செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது.

பிஹார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் ஆரா பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் சிங். அந்தப் பகுதியில் வாடகை ஜீப் வைத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று ஜாவூன் கிராமத்திலிருந்து 15 பயணிகளை தனது ஜீப்பில் ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தார்.

அப்போது சாலையில் அவரது ஜீப்பை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் சந்தோஷ் சிங்கின் வயிற்றில் குண்டு பாய்ந்தது.

துப்பாக்கிக் குண்டால் காயமடைந்தபோதும் வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி பாதுகாப்பான இடத்துக்கு வந்து வண்டியை நிறுத்தினார் சந்தோஷ். இதைத் தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் தப்பிவிட்டனர். பின்னர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சந்தோஷ் சிங்கை, மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடலில் இருந்து குண்டு அகற்றப்பட்டு தற்போது மருத்துவமனையில் அவர் நலமுடன் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஜீப்பை துரத்திய துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in