கடற்படையின் அர்ப்பணிப்பு நாட்டின் பாதுகாப்பு செழிப்பை உறுதி செய்கிறது: பிரதமர் மோடி புகழாரம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: கடற்படையின் அர்ப்பணிப்பு உணர்வால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் செழிப்பு உறுதி செய்யப்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய கடற்படை தினம் நேற்று கொண்டாடப்பட்டதையடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: நமது நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்பினை ஈடு இணையற்ற தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் பாதுகாக்கும் நமது கடற்படை வீரர்களுக்கு இந்த கடற்படை தினத்தில் வணக்கம் செலுத்துகிறோம். அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வால்தான் நமது தேசம் பாதுகாப்புடனும், செழுமையுடனும் இருப்பதை உறுதி செய்கிறது. இந்தியாவின் வளமான கடல்சார் வரலாற்றிலும் நாங்கள் பெருமிதம் கொாள்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பதிவில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பில் கடற்படையின் முக்கியத்துவத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. 1971-ம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போரில் நமது கடற்படையினரின் வீரத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 4-ம் தேதி கடற்படை தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in