பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டம்: 1.3 லட்சம் இடத்துக்கு 6.2 லட்சம் விண்ணப்பம்

பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டம்: 1.3 லட்சம் இடத்துக்கு 6.2 லட்சம் விண்ணப்பம்
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டத்தில் 1.3 லட்சம் வேலை வாய்ப்புகளுக்கு 6.2 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக மக்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டம் குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு கம்பெனிகள் விவகாரத்துறை இணையமைச்சர் ஹர்ஷ் மல்கோத்ரா அளித்த பதிலில் கூறியதாவது:

பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டம் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு அக்டோபர் மாதம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் 500 நிறுவனங்கள் பங்கேற்று தங்களின் சிஎஸ்ஆர் நிதியில் தொழிற் பயிற்சியை அளிக்கின்றன. 5 ஆண்டுகளில் 1 கோடி மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து திறன்மிக்கவர்களாக ஆக்குவதுதான் இத்திட்டத்தின் இலக்கு. இத்திட்டத்தை நன்கு செயல்படுத்துவதற்காக கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சகம் ரூ.840 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஹர்ஷ் மல்கோத்ரா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in